திண்டுக்கல், நவ. 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 24-ஆவது மாநாடு, நவம்பர் 22, 23 தேதிகளில், தோழர் என். சங்க ரய்யா நினைவரங்கில் (டி.எஸ்.எல். மஹால்) நடைபெற்றது. முதல் நாளில் பேரணி, செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
தீர்மானங்கள்
இரண்டாவது நாள் மாநாட் டில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சேபணையற்ற அரசு தரிசு நிலம், பஞ்சமி, பூமிதானம், கிராம தானம் உள்ளிட்ட உபரி நிலங் களை அனுபவித்து வரும் ஏழை களுக்கு நிலப் பட்டா, குடி மனைப்பட்டா வழங்கவேண்டும்; குவாரி புறம்போக்கு, சாலை- நீர்வழிப் புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் ஏழைகளுக்கு மாற்று இடமும் வீடும் இலவச மாக கட்டித்தர வேண்டும்; பழனி பெரியம்மாபட்டியில் உச்ச வரம்பு நிலத்தில் உழவடை செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்; பழனி தும்மலப்பட்டி உபரி நிலத்தின் பயனாளிகள் 37 பேருக்கு பட்டா வழங்கவேண்டும்; ஒட்டன் சத்திரம் மண்டவாடியில் பஞ்சமி நிலங்களை அனுபவித்து வரும் தலித் விவசாயிகள் 7 பேருக்கு பட்டா வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். 2024-ம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் 51 வழக்குகளில் போக்சோ குற்ற வாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றத் தீர்ப்புகளை மாநாடு வரவேற்கிறது என் பன உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி வாழ்த்திப் பேசினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
இம்மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக கே. பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட் டார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர்களாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பி.செல்வராஜ், பி.வசந்தாமணி, ஜி. ராணி, எஸ்.கமலக்கண்ணன், டி. முத்துச் சாமி, எம். ராமசாமி, பி. ஆஸாத், தா.அஜாய் கோஷ், கே. அருள் செல்வன், கே. கந்தசாமி, கே.ஆர்.பாலாஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம் நிறைவுரையாற்றினார். மாநகரச் செயலாளர் ஏ. அரபு முகமது நன்றி கூறினார்.