tamilnadu

img

ஆகாயத் தாமரைகளை அகற்றி முழுமையாக தூர்வார சிபிஎம் கோரிக்கை

ஆகாயத் தாமரைகளை அகற்றி  முழுமையாக தூர்வார சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், ஏப்.27-  திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும். இரு கரைகளிலிருந்தும் ஓடம்போக்கி ஆற்றில் கழிவு நீர் கலக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் பகுதியில், வெட்டாற்றில் இருந்து பிரிந்து ஓடம்போக்கி ஆறு என்கிற பெயரில் பாசன ஆறாக திருவாரூர் பகுதியில், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் விவசாய நிலங்களுக்கு பாசன ஆறாகவும், வடிகாலாகவும் ஓடம்போக்கி ஆறு விவசாயிகளுக்கு பயன்படுகிறது. கடந்த வருடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் இருந்து, விளமல் கல்பாலம் பகுதி வரை தூர்வாரப்பட்டது. தூர்வாரியதால், தற்போது வரை ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  குளிப்பது, துணிகளை துவைப்பது உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்ற னர். ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருப்ப தால் குடியிருப்பு பகுதிகளில் நீர் ஆதாரமும் குறையாமல் உள்ளது. முழுமையாக தூர்வார வேண்டும் இந்த நிலையில், திருவாரூர் நகரில்  பெருகிவரும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள  கழிவு நீர், இந்த ஆற்றில் கலக்கும் அவல நிலை உள்ளது. மேலும் பழைய  பேருந்து நிலையம் செல்லும் பாலம் மற்றும் நேதாஜி சாலை செல்லும்  பாதையில் அமைந்துள்ள ஆற்றுப்பா லத்தில் துவங்கி மருதப்பட்டணம் புதுப்பாலம் வரை ஆகாயத் தாமரை முழுமையாக பரவியுள்ளது.  திருவாரூரில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் இருந்து வெளியே றும் கழிவுநீர், ஓடம்போக்கி ஆற்றில்  கலப்பதால், ஆற்று நீர் மாசுபட்டு, சாக்கடையாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே இந்தப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்படுத்தும் கழிவுநீர் ஆற்றில்  கலக்காமல் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பாதாளச் சாக்கடையில் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து தாமரையை முற்றிலும் அகற்றி, மேற்குறிப்பிட்ட பகுதிகளை முழுமை யாக தூர்வாரி ஆற்று நீர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செல்ல உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.