கும்பகோணம், ஜூலை 16- தனியார்மயக் கல்விக் கொள்கை யால், கொள்ளையால் கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். அதன் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் குழந்தைகளுக்கு போதுமான வசதி இல்லாமல், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தை கள் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வு உலகையே நிலைகுலையச் செய்தது. அந்த கொடுமையின் நினைவால் வாடும் பெற்றோர், உறவினர் ஆண்டு தோறும் கும்பகோணத்தில் 94 குழந்தை களுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்ற னர். செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அப்பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள 94 குழந்தை களின் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அருளர சன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜீவபாரதி, நாகராஜன், ஓய்வூதி யர் சங்க பொறுப்பாளர்கள் ராஜகோபா லன், கண்ணன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.