மாணவர்களிடையே மோதல் கலாச்சாரத்தை தீர்க்க சிறப்புக் குழுவை அமைக்க நீதிமன்றம் பரிந்துரை
ன்னை, ஏப்.21 - உயர் நீதிமன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்த இடையீட்டு மனுவில், மாணவர்களிடையே நிலவி வரும் மோதல் கலாச்சாரத்தை தீர்க்க, சென்னை உயர்நீதி மன்றம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்திட பரிந்து ரைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே கடந்த ஆண்டு நடந்த மோதலின் காரணமாக 9.10.2024 அன்று, மாணவர் ஒருவர் உயிரிழந்ததை யொட்டி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களின் இடைக்கால பிணையிற்காக நீதிமன்ற விசாரணையின் போது, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஓர் குறுக்கீடு மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2024 அக் டோபர் 22 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கில் மாண வர்களிடையே நிலவி வரும் மோதல் கலாச் சாரத்தை தீர்க்க, 17.04.2025 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா ஒரு சிறப்புக் குழுவை அமைத்திட பரிந்துரைத்து வழங்கி யிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வழக்கில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி சார்பாக வழக்கறிஞர் திருமூர்த்தி இடை யீட்டு மனுயிட்டார். தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கும் கல்லூரி மாணவர்களுக்கிடையிலான பிரச்சனையில், மாணவர்களை கலவரக்காரர் கள் போல் அணுகுவதை கைவிட்டு, கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு உரிய முறையில் நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இம்மாதிரி யான ‘ரூட்’ பிரச்சனை குறித்து முன்னாள் மாண வர்கள் மூலம், இன்னாள் மாணவர்களுக்கு உளவியல் புரிதல் ஏற்படுத்த வேண்டுமென வும், மாணவர் பேரவை தேர்தல்களை நடத்தி, இம்மாணவர் பிரதிநிதிகள் மூலம் இப்பிரச்ச னைகளுக்கு உறுதியான தீர்வு காண வேண்டு மென வாதிட்டார். “குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப் படுகிறார்கள்” என இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருப் பதற்கு ஏற்ப, மாணவர்களிடையே நிலவி வரும் மோதல் என்பது கல்வி வளாகங்களில் மறுக்கப்பட்டு வரும் ஜனநாயகத்தினாலேயே ஆகும். மாணவர் ஒற்றுமையை ஊக்குவித்து, அவர்களின் பிரச்சனைகளை அரசிடமும், நிர்வாகத்திடமும் தெரிய வைப்பதற்கான ஒரு மேடையை உறுதிப்படுத்துவது மாணவர் பேர வைகளே. இவை, மாணவர்களுக்கு தலைமை பண்பையும் அரசியல் உணர்வை ஊக்கு விக்கவும் விளங்குகின்றன. அனைத்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வளாகங்களிலும், இதற்கான தேர்தல் களை ஜனநாயக பூர்வமாக நடத்திட பரிந்து ரைத்திருக்கிறது லிண்டோ ஆணையம். இப்பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் அமல் படுத்த ஆணை பிறப்பித்த போதிலும், கல்வி வளாகங்களில் மாணவர்களின் கருத்து சுதந்தி ரத்தையும் ஜனநாயக பண்புகளையும் முடக்கும் விதமாக இவற்றை ஏற்காமல், தேர்தல் களை நடத்தாமல் தடை செய்வது கண்டனத் துக்குரியதாகும். குறிப்பாக மாணவர்களுக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்திடும் வகையில் அவர் களுக்கான தொலைநோக்கு திட்டத்தினை ஏற்படுத்திட மாணவர் ஜனநாயக பேரவை தேர்தல் நடந்தால் இந்த சமூக சீர்கேடான சில பிரச்சனைகளில் மாணவர்கள் ஈடுபடுவது தவிர்க்கப்படும். தமிழ்நாடு அரசு அனைத்து கல்வி நிலை யங்களிலும் மாணவர்களை ஜனநாயகப் படுத்துவதற்கு, மாணவர்களுக்கான அரசி யல் புரிதல் ஏற்படுத்திட கல்வி நிலைய வளா கங்களில் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துகளும் பயிற்சி பட்டறைகளும் சகோ தரத்துவம், மனிதநேயம் குறித்தான தொடர் வகுப்புகளை நடத்திட வேண்டும். ஆசிரி யர் மாணவர் ஒற்றுமைகள் குறித்து போதிக்க வேண்டும். சமூகம் குறித்து ஓர் அரசியல் உரை யாடல் நடத்திட வேண்டும். கற்றல்-கற்பித்தல் இதையும் தாண்டி உரையாடல்களை அதிகப் படுத்த வேண்டும். கல்வி நிலைய வளாக செயல்பாடுகளை அதிகரித்து மாணவர்களுக் கான விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களுக் கான சம வாய்ப்புகளை அளித்து மாணவர் களை மேல் நோக்கி விடுவதில் தமிழ்நாடு அரசு தொடர் கவனம் செலுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் அனைவரும் இதில் ஒன்றாக செயல்பட்டு, எதிர்காலத்தின் தூணாக-அரணாக அமையும் மாணவர்கள் சமுதாயத்தை பாதுகாத்திட, கைகோர்த்து மாண வர்களை சரியாக வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களி டையே நிலவி வரும் மோதல் கலாச்சாரத்தை தீர்க்க சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புக் குழுவை முறையாக பயன்படுத்தி மாணவர் களை நல்வழிப்படுத்த, தமிழ்நாடு அரசு மாண வர்கள் மீது தொடர் கவனம் செலுத்திட வேண்டு மென இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.