tamilnadu

தமிழகத்தில் 3,509 பேருக்கு கொரோனா சமூகப்பரவலை அடையவில்லை: முதல்வர்

மதுரை, ஜூன் 24-  தமிழகத்தில் வியாழனன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் வியா ழனன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தின் அரசியல் தலை நகரான மதுரையில்  203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இராமநாத புரத்தில் 140 பேர், தேனியில் 86 பேர், சிவகங்கை 25, விருதுநகர் 28, திண்டுக்கல் 15 என்ற எண் ணிக்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் வியாழனன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால்  கொரோனாவால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது.   தமிழகம் முழுவதும் 2,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப் பில் இருந்து குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 30,064 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது. விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா பாதிப் பால் உயிரிழந்தனர்.  விருதுநக ரைச்  சேர்ந்த கர்ப்பிணி, சாத்தூர், சிவகாசி பகுதியை சேர்ந்த இரண்டு பேர் என மூன்று பேர்  கொரோனா சிகிச்சை பலனின்றி  ஒரே நாளில் உயிரிழந்தனர். இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தமிழகத்தில் சமூகப்பரவலை அடையவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி யுள்ளார்.