மதுரை, ஏப்.3- மதுரை கப்பலூா் தொழிற்பே ட்டையில் பணியாற்றும் தொழிலா ளா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை தொழிலாளா் வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு நிதியில் இருந்து வழங்க வேண்டும் என கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கம் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ரகுநாதராஜா தீக்கதிருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் சுமார் 450 தொழிற்சாலைகள் உள்ளன. டெக்ஸ்டைல், கார்மெண்ட்ஸ், பிளாஸ்டிக், இன்ஜினியரிங், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 60 சதவீதம் பெண்கள். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொழிற்பேட்டை கப்பலூர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நிறுவனங்கள் மாதத்திற்கு ரூ.700 கோடி வரை வர்த்தகம் செய்கின்றன. தற்போது கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவது மிருந்து பொருட்களை வாங்கிச் சென்ற விற்பனையாளர்கள் நிறுவனங்களை அடைத்து விட்டதால் அவர்களால் குறித்த காலத்தில் தரவேண்டிய பணம் எங்களுக்கு வந்துசேரவில்லை. கப்பலூர் தொழிற்பேட்டை யிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளா்க ளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கு தொழிலா ளா்களின் வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு ரூ.45 ஆயிரம் கோடி அளவில் (Un Claimed) கோரப்படாமல் உள்ளது . அந்த நிதியில் இருந்து அரசு தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பளம் அரசே வழங்குக
அழிந்து வரும் நிலையில் உள்ள சிறு, குறு தொழில்களை காக்க அந்த (முறைசாரா) தொழிலாளா்களுக்கு 50 சதவீத ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். மின்சாரக் கட்டணம் செலுத்த 14 ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. எனவே மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
வங்கிக்கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்க
தொழில் நடத்துவோர், சிறு-குறு முதலீட்டாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை மூன்று மாதத்திற்கு தள்ளி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் எந்தப் பலனும் இல்லை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக வைத்துக்கொள்வோம். அதற்கு மாதந்திர வட்டி ரூ.5 ஆயிரம் என வைத்துக்கொள்வோம். இது இரண்டாவது மாதம், மூன்றாவது மாதங்களில் கூட்டுவட்டியாக சேர்ந்துவிடும். இதனால் கடன் வாங்கியவர்களுக்கு சுமைதான் அதிகரிக்கும். எனவே மூன்று மாதம் வங்கிக் கடன்களுக்கான வட்டியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும். இதுதான் கடன் வாங்கியவர்களுக்கு நன்மை பயக்கும்.
எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்
வங்கியில் வாங்கிய கடனு க்கான தவணைத் தொகை (இசிஎஸ்) எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் மூலம் வங்கியில் போதுமான பணமுள்ள பலருக்கு பிடிக்கப்பட்டது. இதுவும் எங்களுக்கு பலத்த அடியாகும். இதற்கும் ஒரு தீர்வை மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.