tamilnadu

மதுரை - இராமேஸ்வரம் ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றிடுக!

மதுரை - இராமேஸ்வரம் ரயில் பாதையை  இரட்டை வழிப்பாதையாக மாற்றிடுக!

நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே  துறைக்கான மானிய கோரிக்கை மீதான  விவாதத்தில் இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலை வருமான நவாஸ்கனி எம்.பி. பேசினார். அப்போது இராமேஸ்வரம் ரயில்வே சேவை களுக்கான கோரிக்கைகளை முன்வைத் தார்.  அதன் விபரம் வருமாறு: பாம்பன் பாலத்தையும் காஷ்மீரில் அமைந்துள்ள உயரமான செனாப் ரயில் பாலத்தை இணைக்கும் வகையில் அம்ரித்  பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும். இராமேஸ்வரம் மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சென்னை-இராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழி யாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயிலை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும். இராமேஸ்வரம்- கன்னியாகுமரி (22621 /22622) இரு மார்க்கமும் ரயில்களை மீண்  டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக இரு  மார்க்கமும், இராமேஸ்வரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், இராமேஸ்வரம் - திருச்சி இரவு நேர பய ணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை - இராமேஸ்வரம், இராமேஸ்வரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் - மதுரை புனலூர் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை இராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்  பட்டு வரும் இராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டியை தினசரி  வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படக்கூடிய சிலம்பு விரைவு  வண்டியை தினசரி வண்டியாக மாற்ற வேண்டும். அந்த ரயில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் நிறுத்தங்கள் தொடர்ந்து கேட்டு  வருகின்றோம், அங்கு அந்த ரயில் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்களிலிருந்து இராமேஸ்வ ரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வரு வாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதி கம் அதன் மூலம் பயனடைய முடியும். எனவே மதுரை வழியாக விரைவு வண்டி களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து இராமேஸ்வ ரத்திற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படு கின்றன, ஆனால் இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மிக பழைய பெட்டிகளாக அமைந்துள்ளது. அது பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியத்தை தரக்கூடிய தாக அமைந்திருக்கிறது. எனவே சென்னை யில் இருந்து இராமேஸ்வரத்துக்கு இயக் கப்படும் ரயில்களுக்கு புதிய பெட்டிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.