ராஞ்சி ஜார்க்கண்ட் சட்ட மன்றத் தேர்தல் 2 கட்டங்களாக (நவ., 13 மற்றும் 20) நடை பெறும் என சமீபத்தில் இந் திய தேர்தல் ஆணையம் அறி வித்தது. இந்த தேர்தலில் ஜார் கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கி ரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம் அடங்கிய “இந் தியா” கூட்டணியும், பாஜக, ஜார்க் கண்ட் மாணவர் சங்கம், ஐக் கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜன நாயக கூட்டணியும் நேரடியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிஜிபி அனு ராக் குப்தாவை (பொறுப்பு) நீக்கி இந்திய தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜார்க்கண்ட் மாநில டிஜிபி பொறுப்பை மூத்த டிஜிபி அந் தஸ்திலான வேறொரு அதிகாரி யிடம் ஒப்படைக்கப்பட வேண் டும் என்று தெரிவிக்கப்பட்டு ளது. அனுராக் குப்தா நீக்கத்திற் கான முழுமையான காரணம், அவர் என்ன விதிமீறலில் ஈடு பட்டார் என இந்திய தேர்தல் ஆணையம் தெளிவாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நேர்மையாக செயல் படுவதால் அவரை நீக்க பாஜக அழுத்தம் கொடுத்துள்ளதாக ஆளும் ஜேஎம்எம் கட்சி நிர்வா கிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டாவது முறை... தற்போது பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட் டுள்ள அனுராக் குப்தா 1990 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் பதவி யில் சேர்ந்தார். இவர் தேர்தல் நேரத்தில் ஒரு பொறுப்பில் இருந்து இப்படி நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. இத ற்கு முன்பும் ஒருமுறை நடந் துள்ளது. கடந்த 2019 மக்க ளவை தேர்தலில் சிறப்பு பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.