tamilnadu

ஹிஜாப்புடன் அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவிகள் இடைநீக்கம்-வழக்குப்பதிவு

பெங்களூரு,பிப்.19- கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்புக ளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பள்ளி மாணவிகளுக்கு எதிராக இத்தகைய அராஜகம் தொடர்கிறது. இந்துத்துவா சக்திகளின் தூண்டுத லால் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப்புக்கு எதிராக போராட் டம் நடைபெற்றது. ஹிஜாப்புக்கு எதிராக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.  இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது.  பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இவர்களை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர்.  இந்நிலையில் ஷிவமோகா மாவட்டம் சிரளகொப்பாவில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை உரிமை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.  இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தாசில்தார், போலீசார், கல்வித்துறை அதி காரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.