tamilnadu

மாசடைந்து வரும் குடிநீர் மஞ்சள் காமாலை, டைபாய்டு பரவுகிறது

மதுரை, மே 19- மதுரையில் குடி நீர் மாசுபட்டு வருவ தால் நோய் பரவும் ஆபத்துள்ளது. மதுரை மாநகராட்சி 10-ஆவது வார்டு ஆரப்பாளையம் சோனைகோவில் தோப்புப் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் மாசு படிந்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழுச் செயலாளர் வை. ஸ்டாலின் கூறியதாவது:-  கடந்த பத்து நாட்களாக இப்பகுதியில் குடிநீர் என்பது மாசு படிந்து வருகிறது. இத னால் எட்டுப் பேருக்கு மஞ்சள் காமாலை, இரண்டு பேர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்ததையடுத்து அவர்கள் குடிநீரை வந்து ஆய்வு செய்துவிட்டு தண்ணீர் மாசுபட்டு வருவதால் இது போன்ற நோய்த்தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. குடி நீரில் மாசு படிந்து வருவதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  அப்பகுதி மக்கள் கூறுகையில், குடி நீரை குடிப்பதற்கு அச்சமாக உள்ளது நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டு மென்றனர்.  இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரி களுடன் பகுதிக்குழுச் செயலாளர் வை. ஸ்டாலின், ஏ.பாண்டி, பாலமுருகன், ராஜா ராம், நவீன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.