மதுரை, மார்ச் 10- மதுரை- ஹைதராபாத் இடையே புதிய ரயில் இயக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரையில் மார்ச் 10 அன்று நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். மதுரைக் கோட்ட மேலாளர் பத்ம நாபன் ஆனந்த் வரவேற்றார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், பி.வேலுச்சாமி, ப.கார்த்திக் சிதம்பரம், தனுஷ்குமார், கே.சண்முக சுந்தரம், எஸ்.திருநாவுக்கரசு, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத் திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 10 (வெள்ளியன்று) மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்காக ஒன்றரை மாதத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வமாக கேள்விகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தோம். அவற்றுக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் வழங்கினார்.
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடிக்கு புதிய ரயில் சேவை
மதுரையில் இருந்து மேற்கு மாவட்டங் களுக்கு அகல ரயில்பாதை போடப்பட்ட பின்பு கூட புதிய ரயில்கள் இயக்கப்படாத நிலை இருந்தது. கோயம்புத்தூர் -மேட்டுப்பாளையம் -மதுரை- தூத்துக்குடி இந்த இணைப்பு மிக முக்கியமானது. எனவே புதிய ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டும் என கேட்டிருந்தேன். இப்பொழுது வாரத்திற்கு மூன்று நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில்கள் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே தயாராகி விட்டது; ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி இருக்கிறோம்; ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த ரயில் சேவை துவக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இது ஒரு மிக முக்கியமான வெற்றி. மேற்கு மாவட்ட மக்களுக்கும் தெற்கு மாவட்ட மக்களுக்கும் இடையில் மிகப் பயனுள்ள விஷயமாக இருக்கும். ரயில்வே வாரியம் விரைவில் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அடுத்த வாரம் துவங்க இருக்கிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ரயில்வே அமைச்சரிடம் இது சம்பந்தமாக மீண்டும் வலியுறுத்தி, விரைவில் இதற்கான ஒப்புதலை பெறுவேன்.
தேனி-சென்னை
தேனி- போடி- மதுரை- சென்னை சென்ட்ரல் ரயில் வாரம் மூன்று முறை இயக்கவும். மதுரை- தேனி முன்பதிவு இல்லா விரைவு வண்டி யையும் போடிநாயக்கனூருக்கு நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. விருதுநகரில் இருந்து திண்டுக்கல் இடையே கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க, முயற்சி எடுக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.
பெண் ரயில் ஓட்டுநர்களுக்கு கழிவறை வசதி
லோகோ பைலட் -பெண் ஓட்டுநர்களுக்கு ரயில் பெட்டியில் கழிவறை வசதிகள் செய்யப் படவில்லை. 16 மணி நேரம், 18 மணி நேரம் இயக்குகிற சூழலில் பலர் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் மகப்பேறு காலம் உள்ளிட்ட பல காலங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. எனவே, ரயில் இன்ஜின் பகுதியில் கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். இப்பொழுது தயாராகிற புதிய பெட்டிகளில் அதற்கான வடிவமைப்பு சேர்க்கப்பட்டுள்ள தைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
கூடல்நகர் ரயில் நிலையம்
அடுத்து மிக முக்கியமாக மதுரையின் மிக முக்கியமான பிரச்சனை கூடல்நகர் ரயில் நிலைய பிரச்சனை. கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக ஆக்குவதற்கான முதல் படியை நாங்கள் துவக்கி விட்டோம் என்று அதி காரிகள் தெரிவித்தனர். கூடல்நகர் ரயில் நிலை யத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான திட்டமிடலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் இங்கே இருக்கிற பல பொறியாளர்களோடு ஆலோசனை செய்து, தெற்கு ரயில்வே நிலைய பொது மேலாளரி டம் வழங்கி இருக்கிறோம். அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா காலத்திற்கு முன்பு காட்சி ஊடகம் அல்லது எழுத்து ஊடகம், அச்சு ஊடகம் உள்ளிட்ட ஊடக நண்பர்களுக்கு ரயில்வே பயண கட்டண சலுகை இருந்தது. கொரோனா காலத்திற்குப் பின்பு பறிக்கப்பட்ட சலுகையில் ஊடகத்தினருக்கு அளிக்கப்பட்ட கட்டணச் சலுகையும் ஒன்று. இந்த கூட்டத் திலும் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். உடனடியாக ஊடகத்துறையினருக்கான ரயில் கட்டண சலுகை கொரோனாவிற்கு முன்பு இருந்ததைப் போல வழங்கப்பட வேண்டும். இதை ரயில்வே அமைச்சகத்திடமும் வலி யுறுத்தியுள்ளோம்.
மதுரை-திருநெல்வேலி-திருச்சிக்கு சீசன் டிக்கெட் வழங்குக!
இப்பொழுது சீசன் டிக்கெட் என்பது 150 கிலோ மீட்டருக்கு இடையில் பயணப்படு கிறவர்களுக்கு மட்டும்தான் என்ற விதி இருக்கிறது. மதுரையில் இருந்து திருநெல் வேலிக்கு சீசன் டிக்கெட் கிடையாது. மதுரையிலிருந்து திருச்சிக்கு சீசன் டிக்கெட் கிடையாது. ஏனென்றால் இவை இரண்டும் பத்து கிலோமீட்டர் அதிகமாக உள்ளன. மும்பையில் இருந்து புனேக்கு சீசன் டிக்கெட் உள்ளது. ஆனால், அது 190 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அங்கே மட்டும் எப்படி விதி பொருந்துகிறது என்று கேள்வி எழுப்பினால், அது சிறப்பு மண்டலம், சலுகை வழங்குகின்றோம் என்று ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள். அதே போல மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும் மதுரையிலிருந்து திருச்சிக்கும் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீசன் டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.