tamilnadu

img

மதுரையில் விரைவில் ‘மெமு’ ரயில் சேவை

மதுரை, அக்.28-  மதுரை கோட்டத்தில் ‘மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்’ (மெமு) வகை ரயில் சேவையை துவக்குவது குறித்து மத்திய ரயில்வே இணை  அமைச்சர் சோமண்ணா பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என அகில் பாரதிய கிரஹக் பஞ்சாயத்தின் (ஏ.பி. ஜி.பி.,) தென் தமிழக ஒருங்கிணைப்பா ளர் சத்தியபாலன் தெரிவித்தார்.  தெற்கு ரயில்வேயில் திருச்சி, திருவ னந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை கோட்டங்களில் ‘மெமு’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால்  மதுரை கோட்டத்தில் ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை. மதுரையில் ‘மெமு’ ரயில்களை இயக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.  200 கி.மீ., வரை தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு ‘மெமு’ வகை ரயில்கள் உகந்தவை. மதுரையில் இருந்து துாத்துக்குடி, திருநெல்வேலி, போடி, பொள்ளாச்சி, திருச்சி உள்ளிட்ட அனைத்து இடங்களும் 200 கி.மீ., தொலைவிற்குள் வருவதால் 3 மணி நேரத்திற்குள் பயணம் அமையும்.  ஏற்கனவே இவ்வழித்தடங்கள் மின்மய மாக்கப்பட்டுள்ளதால், மதுரையை மையமாகக் கொண்டு எளிதில் மெமு ரயில்களை இயக்க முடியும். இதன் மூலம் பேருந்தைவிட குறைந்த கட்டணத்தில் விரைவான, பாதுகாப்பான பயணத்தை மேற் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.