கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை துவங்கப்படாததற்கு கண்டனம்
திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் போராட்டம்
திருத்துறைப்பூண்டி, ஜுன் 3- தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை உடனடியாக துவங்கிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழு சார்பில், நகரச் செயலாளர் கே. கோபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். சாமிநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் எம். ஜெயப்பிரகாஷ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன் உரையாற்றினார். இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.பி ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.பழனிச்சாமி, ஏ.கே. வேலவன், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் முகமது இக்பால்ராஜா, நகர பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், அப்துல் ரகுமான், நகர குழு உறுப்பினர்கள் எஸ்.தண்டபாணி, ஏ.கே. செல்வம், ஜி.தமிழ்மணி, என்.அன்புமணி, என்.கோதாவரி, வி.தொ.ச. நகரச் செயலாளர் ஆர்.எம். சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் சி.வீரசேகரன், சிஐடி மாவட்டத் துணைச் செயலாளர் பி.என். லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடப்பாண்டு பள்ளி மாணவர்களை முழு கல்வி கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.