தோழர் யு.கே.சிவஞானம் காலமாகி விட்டார் என்பதை நம்ப மனம் மறுக்கிறது. மனிதராகப் பிறந்த எவரும் மரணிப்பது என்பது ஒரு நாள் நடந்தே தீரும். ஆனால் அகால மரணம் என்பது மிகுந்த வேதனை ஏற்படுத்துகிறது. தோழர் யு.கே.சிவஞானம் இறந்த காலமும், இயக்க சூழலும் நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. ‘யு.கே.எஸ்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் சிவஞானம் தலைசிறந்த கட்சி ஊழியரா வார். எப்போதும் கட்சி - இயக்கம் என்ற சிந்தனை யோடும், உணர்வோடும் உழைத்துக் கொண்டிருந்த வர். கட்சிக்குள் உறுப்பினர் - இடைக்குழு உறுப்பி னர் - இடைக்குழு செயலாளர் - மாவட்டக்குழு உறுப்பி னர் - மாவட்ட செயற்குழு உறுப்பினர் என படிப்படி யாக உயர்ந்தவர். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் - மாநில நிர்வாகி - தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் - துணை பொதுச்செயலாளர் என பல வெகுஜன அரங்க பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றி மாநிலம் முழுவதும் நன்கு அறிமுகமானவர் தோழர் சிவஞானம். கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர். பி.ஆர்.நடராஜன் அவர்களின் தனி செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றி அத்தகைய மக்கள் பணி யிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் சிவஞானம்.
ஸ்தாபனப் பணிகளில்...
கட்சி வளர்ச்சி - இயக்க வளர்ச்சி குறித்து அவ ருக்கு ஏராளமான கருத்துக்களும், ஆலோசனை களும் இருந்தன. பல முறை அவற்றை என்னுடன் பகிர்ந்து உள்ளார். அவரது தொலைபேசி அழைப்பு என்றால் நான் ஒரு போதும் அதனை தவற விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் அவசர தகவல் களும், அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார். கட்சியின் கோவை மாவட்டப் பொறுப்பாளராக நான் ஆறு ஆண்டு காலம் செயல்பட்ட போது என்னுடன் அடிக்கடி தொடர்பு கொண்ட முக்கிய ஊழியர்களில் அவரும் ஒருவர்.
மக்களைத் திரட்டும் ஆற்றல்...
கட்சி - வெகுஜன அமைப்புக்களின் அனைத்து இயக்கங்களிலும், போராட்டங்களிலும் அடக்கு முறைகளை எதிர்கொண்டு அவர் பங்காற்றியுள் ளார். அவருக்கு பொறுப்பான அரங்கில் - பகுதிகளில் போராட்டங்களுக்கு திட்டமிடுவதிலும், மக்களைத் திரட்டுவதிலும் அவர் காட்டிய அக்கறை அபார மானது. கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதி யில் வனவிலங்கு சரணாலய பகுதி மற்றும் தலித் - பழங்குடி மக்களுக்கு சேர வேண்டிய நில பகுதி களில் ஆன்மீகம் என்ற பெயரால் ஜக்கிவாசுதேவ் பெரும் ஆக்கிரமிப்புக்களை செய்த போது அதற்கு எதிராக கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் சார்பாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற வலு வான போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இதர பல முக்கிய தோழர்களோடு இணைந்து அவரது பங்களிப்பும் பிரதானமாக இருந்தது. இப்போராட்டம் தொடர்பான பிரச்சனை இன்றளவும் நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருகிறது.
சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராளி...
அரசியல் ஸ்தாபன பிரச்சனைகளோடு சமூக பிரச்சனைகளில் அவர் காட்டி வந்த அக்கறை மெச்சத் தகுந்ததாகும். கோவை மாவட்டத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான பல போராட்டங்களில் முன்னின்றவர் அவர். அருந்ததியர் உள் ஒதுக்கீடு, கோவை தீண்டாமைச் சுவர் உடைப்பு போன்ற போராட்டங்களில் தலித் அருந்ததியர் மக்களை மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக இதர பகுதி மக்களையும் திரட்டுவதில் செங்கொடி இயக்கத்துக்கு பக்கபலமாக விளங்கியவர் தோழர் சிவஞானம். இதே போல கோவை காளப்பட்டி மாரியம்மன் கோவி லில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தலித் மக்கள் நுழையவோ, வழிபடவோ முடியாது. இந்நிலையில் அப்பிரச்சனையில் பல தொடர் இயக்கங்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு மிகுந்த பதற்றமான சூழலில் காளப்பட்டி மாரியம்மன் கோவில் ஆலைய நுழைவு போராட்டம் நடைபெற்ற போது அதில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இதர பகுதி மக்களும் அணி திரண்டனர். இப்போராட்டம் மகத்தான வெற்றி யடைந்தது. இப்போராட்டத்தில் இவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் முன்னுதாரணமானது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி என்ற முறையில் மேற்கு மாவட்டங்களில் குறிப்பாகவும், மாநிலம் முழுவதும் பொதுவாகவும் அதன் நட வடிக்கைகளை வலுப்படுத்த அவர் வகித்த பாத்திரம் இன்றளவும் நம் நெஞ்சங்களில் நிழலாடுகின்றது. கடுமையான இதய பாதிப்பு காரணமாக மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவரை காணச் சென்ற கோவை மாவட்டக் குழு செயலாளர் சி.பத்மநாபனிடம் தன்னால் பேச முடியாத நிலையில் ‘சிகிச்சை தொடர வேண்டும்” என தாளில் எழுதி கொடுத்துள்ளார். நோயிலிருந்து மீண்டு வர வேண்டுமென்ற இந்த அவரது விருப்பம் அவரது நலன் சார்ந்தது மட்டுமல்ல; இயக்க நலன் சார்ந்ததாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. கட்சியின் கோவை மாவட்டக்குழு அவரை பாது காத்திட மேற்கொண்ட மருத்துவ முயற்சிகள் பாராட்டுக்குரியவை; இருப்பினும் மரணத்தின் பிடியிலிருந்து அவரை விடுவிக்க முடியவில்லை. அவரது இழப்பு கட்சி மற்றும் வெகுஜன இயக்கங் களுக்கு பேரிழப்பாகும். அவரது இயக்கப் பணி களுக்கு துணைநின்ற அவரது துணைவியார், மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த ஆறுதல். அவரது நினைவைப் போற்று கின்ற அதேவேளையில் அவர் முன்னெடுத்துச் சென்ற செங்கொடி இயக்க - இடதுசாரி இயக்கப் பணி களை முன்னிலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம். இது தான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். தோழர் சிவஞானத்திற்கு செவ்வணக்கம்!