மதுரை, டிச.29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் அலங்காநல்லூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி (45) உடல் நலக் குறைவால் நவ.25 அன்று காலமானார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் அலங்கா நல்லூர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி யவர். மறைந்த தோழர் எஸ்.ஆண்டிச்சாமி யின் படத்திறப்பு மற்றும் குடும்ப பாது காப்பு நிதியளிப்பு நிகழ்ச்சி அலங்கா நல்லூர் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி தலைமை வகித்தார். கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் வி.உமா மகேஸ்வரன், திமுக அலங்காநல்லூர் பேரூராட்சி செயலாளர் ரகுபதி, சிபிஐ ஒன்றி யச் செயலாளர் சி.குமரேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் எம்.சுப்புராயலு, விசிக ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் ஆகி யோர் புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் தோழர் எஸ்.ஆண்டிச்சாமி குடும்ப பாதுகாப்பு நிதியாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோ லையை, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், ஆண்டிச் சாமியின் மனைவி ஆ.முருகேஸ்வரி மற்றும் மகள்கள் திவ்யா, சஞ்சனா மற்றும் குடும்பத்தாரிடம் வழங்கினார். அலங்காநல்லூர் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எம்.சேதுராஜன், எம்.ஆறுமுகம், என்.ஸ்டாலின்குமார், பி.பஞ்சாட்சரம், கே. பாண்டியன், எஸ்.ஜெயகுமார், பி.ஞான வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.