tamilnadu

img

தோழர் ஆர். முருகன் காலமானார்

தோழர் ஆர். முருகன் காலமானார்

புதுக்கோட்டை,  ஜுன் 2-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூர் கிளைச் செயலாளர் தோழர் ஆர்.முருகன் (63) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகியாகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர் தோழர் ஆர்.முருகன்.  தொண்டைமான் நல்லூர் கிளைச் செயலாளரக பல ஆண்டுகள் இருந்து வந்தார். இவர் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலளார் மறைந்த தோழர் ஆர்.கருப்பையா அவர்களின் சகோதரரும் ஆவார்.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோழர் ஆர்.முருகன் அவர் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கண்ணம்மாள், சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், என்.மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜோஷப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் ஆர். முருகனின் உடல் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. முருகனுக்கு அழகுராணி என்ற மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.