tamilnadu

img

என்றென்றும் வழிகாட்டும் தோழர் என்.வரதராஜன்

இளம் வயதிலேயே மில் தொழிலாளியான வர். தொழிற்சங்க பணிகளின் வழி கம்யூனி ஸ்ட்டானவர். விவசாய அரங்கிலும் பணி செய்தவர். மக்கள் பணியின் பகுதியாக சட்டமன்ற உறுப்பினரானவர். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கிய 52 பேர்களில் ஒருவ ரானவர். திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஒன்றுபட்ட கட்சி யின் மதுரை மாவட்டக்குழு செயலாளரானவர். மாநில செயற்குழு உறுப்பினராகவும் மத்தியக்குழு உறுப்பினராக வும் மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டவர்.  பாட்டாளி வர்க்க கட்சியின் கொள்கைகளை, லட்சியங்களை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் வலிமையாகவும் பாய்ண்ட் பாய்ண்ட்டாக எடுத்துரைப்பவர். அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியாவதற்கு முழு மூச்சாக செயல்பட்டவர். அசராத உழைப்பாளி. மாநிலம் முழுவதும் பயணம் செய்து கட்சி அமைப்புகளை வலுப்படுத்தியவர். தீக்கதிர் நாளிதழின் வெளியீட்டாளராக விளங்கி அதன் வளர்ச்சிக்கு வழி கோலியவர். கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்காக கேரளம் சென்று திரும்பிய போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானவர். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் இறுதிவரை பாடுபட்டவர் - உழைப்பின் சிகரம். அமைப்பின் அரும் வரம் தோழர் என்.வரதராஜன். அவரது இடையறா உழைப்பும் செயலும் என்றென்றும் இளம் தோழர்களுக்கு வழிகாட்டும்!