கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணா மலை நகரைச் சார்ந்த கண்ணன்-முத்துலட்சுமி ஆகி யோருக்கு 5.2.1952 இல் மகனாக பிறந்தார் கே.பாலகிருஷ்ணன். இவர் பள்ளிப் பருவத்திலேயே இந்தி திணிப்புக்கு எதிராக 1965 இல் நடை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத் தில் ஈடுபட்டார். 1970 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் தன்னை இணைத்துக்கொண்டார். 1972 ஆம் ஆண்டு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர்கள் மீது நடைபெற்ற சாதிய தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால், இவரும் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார். முதுகலைப் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் மாணவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னி ன்று வழிநடத்தியதால், பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். தீவிரமான அரசியல் ஈடுபாட்டி னால், இவர் 1972ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார்.
பின்னர் வெளிப்படையாக அரசியல் பணிகளில் ஈடுபட்டார். கட்சி யில் அடுத்தடுத்த பல்வேறு பொறுப்பு களை ஏற்று பணியாற்றினார். குறிப்பாக, 1982ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1988ஆம் ஆண்டு முதல் மாநில செயற்குழு உறுப்பினராகவும், 1989 ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், 2012 ஆம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டார். மேலும், தனது தீவிரமான, முழுமையான உழைப்பால் 2018 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளராகவும் தேர்வு செய்யப் பட்டார். தற்போது தமிழ்நாடு தழுவிய அளவில், சுற்றிச் சுழன்று பாராட்டுக் குரிய வகையில் திறம்பட செயல் பட்டு வருகிறார்.
கடந்த பல ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். காவல்துறையினரின் ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடி பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக சிதம்பரம் பத்மினி காவல்நிலையத்தில், காவல்துறை யினரின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நீதிகேட்டு போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்தார். கம்மாபுரம் காவல்நிலையத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜா கண்ணு படுகொலை செய்யப்பட்ட தைக் கண்டித்து பல கட்ட போராட் டங்களை தலைமை தாங்கி நடத்தி குற்றவாளிகள் தண்டனை பெறச் செய்தார். நெய்வேலி நகர காவல்நிலையத் தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம் இழைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இப்போதும் தொடர்ச்சியாக போராடி வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொறடாவாக பணியாற்றி னார். சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக் கழகம் அரசுடைமையான திலும், சுவாமி சகஜானந்தாவுக்கு மணி மண்டபம் அமைத்ததிலும் இவ ரது பங்களிப்பு மிகவும் பாராட்டுதலுக் குரியது. ரூ.400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் திட்டம் கொண்டுவரவும் இவர் பாடுபட்டார். இவ்வாறு மாமேதை மார்க்ஸ் கொள்கை வழியில் பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதிலும் பாட்டாளிகளின் நலன்களை பாதுகாப்பதிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டு ஓயாமல் உழைத்து வரும் தோழர் கே.பாலகிருஷ்ணனைப் பாராட்டி, 2023 ஆம் ஆண்டுக்கான ‘மார்க்ஸ் மாமணி’ விருது வழங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருமைக் கொள்கிறது.
சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பேசியதிலிருந்து...