tamilnadu

img

தோழர் தி. குமாரவேல் மறைவு: சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

சென்னை, டிச.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மூத்த தலைவர்களில் ஒரு வரும், சிறந்த தொழிற்சங்கவா தியுமான தோழர் தி.குமார வேல் உடல் நலக் குறைவால் ஞாயிறன்று (19.12.2022) உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சிபிஐ (எம்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. தோழர் தி. குமாரவேல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட மாக இருந்த காலத்திலேயே கட்சியிலும், தொழிற்சங்க பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மின்வாரிய ஊழியரான இவர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர், மாநில துணைத் தலைவர், சிஐடியு மாவட்ட செயலாளர், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.  தொழிலா ளர்கள் நலன் காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதில் வல்லமை படைத்தவர். அனைவரோடும் அன்போடு பழகக் கூடியவர். அவரது மறைவு கட்சிக்கும் தொழிற் சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தின ருக்கும், தோழர்களுக்கும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.