திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர், மத்திய கமிட்டி உறுப்பினர் என பல்வேறு பொறுப்பு களை வகித்த மறைந்த தோழர் கே.செல்லம் மாள் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தோழர் செல்லம்மாள் படத்தை மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டச் செயலாளர் பழநிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செய லாளர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். முன்னதாக சங்க மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.