1939 ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் ரயில்வே தொழிலாளி வர்க்கப் போராட்டங் களில் தனி முத்திரை பதித்த தோழர் அனந்தன் நம்பியார். திருச்சி பொன்மலை பணிமனை யில் தனது 20ஆவது வயதில் எரி பொருள் எழுத்தராக (Fuel clerk) பணி யில் சேர்ந்த தோழர் அடுத்த ஆண்டே அன்றைய சவுத் இந்தியன் லேபர் யூனி யனில் (SIRLU) தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்படத் தொடங்கினார். 2ஆம் உலகப் போர் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தையும், தொழிற் சங்க கோரிக்கை போராட்டத்தையும், நாடு விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்தார். தியாகி பரமசிவத்தின் மறைவிற்கு பின் 1942ஆம் ஆண்டு தனது 24 வயதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். முழு நேர சங்க பணிக்காக அடுத்த ஆண்டே வேலையை ராஜினாமா செய்தார். முதல் சம்பள கமிஷன் வர காரணமான 1946 வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி மலபார் போலீசின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார். இந்த போராட்டத்தில் தான் பொன்மலை சங்கத் திடலில் போலீசின் துப்பாக்கி சூட்டிற்கு 5 தோழர்கள் பலியானார்கள். 1960, 1968 அகில இந்திய போராட்டங் களுக்கு தலைமை தாங்கினார். அவசர கால அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். போனஸ் கோரிக்கைக்காக நடைபெற்ற 1974 வேலை நிறுத்தப் போராட்டத்தில் எதிரும் புதிருமான கருத்துக்களை கொண்ட சங்கங்களை ஓரணியில் இணைத்து களம் கண்டார்.
1958ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடத்திய 10 நாள் உண்ணாவிரதம் தென்னகத்தை குலுக்கியது. அதை தொடர்ந்து பர்சனல் பிராஞ்சு உரு வாக்கப்பட்டது. விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யக்கூடாது என அவர் நடத்திய போராட்டம் டிஏஆர் விதி களை உருவாக்கியது. பணி பாது காப்பை உத்தரவாதப்படுத்தியது. 1946ஆம் ஆண்டு ரயில்வே தொகு தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பி னர் ஆவார். ரயில்வே அமைச்சர் சந்தா னத்தை தோற்கடித்து 1952ஆம் ஆண்டு முதல் மக்களவை உறுப்பினரானார். 1962, 1967 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்காலிக ஊழியர் நிரந்தரம், ரயில்வே காலி பணியிடங்களை நிரப்புதல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான பஞ்சப்படி, பயணிகள் பாது காப்பு, பயணிகளின் அடிப்படை வச திகள், தேவைக்கேற்ப அதிக ரயில் களை இயக்க வேண்டும், ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் போன்ற ஊழியர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை எழுப்பும் மன்றமாக மக்களவையை பயன்படுத்தினார். 50 ஆண்டு காலம் ரயில்வே தொழிற்சங்க பணிக்காக தன்னை அர்ப்பணித்த தோழர் அனந்தன் நம்பி யார் டிஆர்இயூ-வின் பொதுச்செய லாளர், தலைவர், துணைத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று 73 வயதில் அவர் நம்மை விட்டு பிரிந்தார். ரயில்வே ஊழியர்கள் இன்று அனுபவிக்கும் பல்வேறு உரிமை களில் அவரது முத்திரை உள்ளது. அவரின் நினைவை போற்றுவோம்.
-வி.அரிலால்,
பொதுச் செயலாளர், டிஆர்இயு