tamilnadu

img

தோழர் ‘மெரினா’ ஆறுமுகம் இல்ல விழாவில் தீக்கதிருக்கு நிதி

பட்டுக்கோட்டை, ஏப். 17 - மெரினா நிறுவனங்களின் தலைவர் மெரினா பூ.ஆறுமுகம் - ஆ.உமா தம்பதியரின் மகள் மருத்துவர் ஆ. துளசிக்கும், கோவை ப.ஜெயராமன்- ஜெ.நீலா தம்பதியரின் மகன் பொறியாளர் ஜெ.அபிஷேக்குக்கும் கடந்த 10-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.  இதையடுத்து திருமண வர வேற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று பட்டுக் கோட்டையில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், க.கனகராஜ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர்  சாமி.நடராஜன், சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், தீக்கதிர் தலைமை பொதுமேலாளர் என்.பாண்டி கட்சியின் மாவட்டச் செய லாளர்கள், அரசியல் கட்சித் தலை வர்கள், தொழில் அதிபர்கள், தொழிற் சங்கத்தினர், பல்வேறு அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.   மணமக்கள் மருத்துவர் ஆ.துளசி, பொறியாளர் ஜெ.அபிஷேக் ஆகி யோர் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாயை தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கினர். மெரினா பூ.ஆறுமுகம், அவரது மகன் மருத்துவர் ஆ.நிருபன் சக்கரவர்த்தி, மருமகள் மருத்துவர் வ.நிரஞ்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.