மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் தும் வகையில் சென்னைக்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராக இருப்பதாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்.14 முதல் 3 நாட்கள் நடைபெறும் வீட்டுவசதி கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தென்னிந்தியாவின் மிகப் பெரிய சொத்துக் கண்காட்சி இது. ஒரு மாநி லத்தின் வளர்ச்சியை சட்டென உணர உதவு வது கட்டட வளர்ச்சிதான்.
இந்த கண்காட்சி வளர்ச்சியின் அடையாளம்” என்றார். நகரங்களின் எண்ணிக்கை உயரும் மக்கள் தொகை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மக்களின் அனைத்து தேவை களையும் அரசே நிறைவேற்றி விட முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற தனியார் அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ கத்தில் 48 விழுக்காடு மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இது வரும் ஆண்டில் மேலும் உயரும்.
10 மண்டலங்கள் தயாராகின்றன தமிழகம் முழுவதும் கிராம-நக ரங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், நெல்லையை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கு புதிய திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை நகரங்களுக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர், மாமல்ல புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலை நகர், திருபெரும்புதூர், பரந்தூர் உட்பட சென்னையை சுற்றியுள்ள 9 வளர்ச்சி மையங்களில் ‘புதுநகர் வளர்ச்சி திட்டம்’ தயா ராகிறது.
சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வும், சென்னையின் நெரிசலை குறைக்கவும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை பொரு ளாதார மையமாக மாற்றவும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்தவும் புது நகர் திட்டம் உதவும். கடந்த ஆட்சியின் 10 ஆண்டு களில் இது போன்ற பணிகள் தேக்கமடைந் திருந்தன. மனை, கட்டிட விண்ணப்பங்களுக் கான ஒப்புதல் தற்போது விரைவாக வெளிப் படையாக வழங்கப்படுகிறது என்றார் முதல்வர்.