tamilnadu

img

என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்கள் இழப்பீடு கேட்டால் பரிசீலனை: நீதிமன்றம்

சென்னை, செப்.13- நெய்வேலி என்.எல்.சி. 3-ம் சுரங்க  விரிவாக்க திட்டத்துக்காக கரிவெட்டி,  கரைமேடு, கத்தாழை, மும்முடிச் சோழன், மேல் வளையமாதேவி, கீழ்  வளையமாதேவி ஆகிய கிராமங்க ளில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்டது. நிலம் கொடுத்த உரிமை யாளர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கக்கோரி அளித்த மனுவை  பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற் றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என். ராமமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட் டதா? இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பது  உள்ளிட்ட விவரங்கள் மனுவில் இடம்  பெறவில்லை. நிலம் கையகப்படுத்தப் பட்டதால், மனுதாரருக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.