இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தை வளர்த் ததில் நடுத்தர வர்க்கத் தினரின் பங்களிப்பு க்கு முக்கியமான இட முண்டு. தமிழகத்தில் இந்த வர்க்கத்தைச் சார்ந்த, குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் பணியாற்றிய பல தோழர்களை ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டு கள்’ தொடரில் சந்தித்துள்ளோம். அத்தகைய ஒருவரான தோழர் ஆர். கிருஷ்ணமாச்சாரி பற்றி இப்போது பார்ப்போம். 1938ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின், சிதம்பரம் வட்டம், பெருமாத்தூர் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஊர்ப் பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்து, புவனகிரி உயர்நிலைப் பள்ளியில் பயின்று, அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பும்,முதுகலைப் பட்டப் படிப்பும் (எம்.ஏ.) முடித்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் சி.கோவிந்தராஜன் பிறந்த ஊர் பெருமாத்தூர்.
புவனகிரி பகுதியில்...
சிதம்பரம், காட்டுமன்னார்குடி, திரு முட்டம், புவனகிரி ஆகிய நான்கு வட்டங்கள் அப்போது ஒரே சிதம்பரம் வட்டமாக இணைந் திருந்தன. அக்கால கட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், விவ சாய தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக வும், குத்தகை விவசாயிகளின் பாதுகாப்பிற் கும் 1950களில் சிதம்பரம் வட்டத்தின் கிராமப்புற ங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங் களை நடத்தியது. பெருமாத்தூர் உள்ளிட்ட புவனகிரி பகுதி கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகளும் பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அக்கா லத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரத் தலை வர்களாக இருந்த பெருமாத்தூர் கிராமத்தைச் சார்ந்ததோழர்கள் பச்சைபிள்ளை, ரங்க நாதன் போன்றோருடன் ஏற்பட்ட தொடர் பினால் கிருஷ்ணமாச்சாரியின் அண்ணன் விவ சாயிகள் சங்கத்தில் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். அண்ணனின் சங்க ஈடுபாடு இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. பச்சை பிள்ளை, ரங்கநாதன் போன்ற தலைவர்களு டன் உரையாடும் வாய்ப்பு இவருக்கும் கிடைத் தது. சிதம்பரம் நகரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு அண்ணனுடன் சேர்ந்து சென்றி ருக்கிறார் கிருஷ்ணமாச்சாரி. தோழர் டி.ஆர்.விஸ்வநாதனுடன் கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்ட தோழமை கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை யை உருவாக்கிட வேண்டுமென்ற உணர்வை ஊட்டியது. 1961ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே கட்சிக் கிளை யை உருவாக்கிட முயற்சி மேற்கொண்டார். தோழர் என். சங்கரய்யாவை அழைத்து பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் இடத்தில் கிளை அமைப்புக் கூட்டம் நடத்தினார்.
எல்ஐசி ஊழியராக
எட்டு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்த இவரது குடும்பம் பல காரணங்களால் நொடி த்துப் போனது. இதனால் இவர் உடனடியாக வேலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட் டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் மதுரைக் கிளை யில் தற்காலிக ஊழியராக வேலை கிடைத்தது. அதன் பின்பு பூண்டி புஷ்பம் கல்லுரியில் ஒன்ற ரை ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி னார். அந்தப் பணியில் மனநிறைவு ஏற்படாத நிலையில் மீண்டும் எல்.ஐ.சி வேலைக்குத் திரும் பினார். அப்போது எல்.ஐ.சி.யில் வேலையி லிருந்த தோழர் ஆர். கிருஷ்ணன் தொடர்பி னால் இவர் காப்பீட்டு ஊழியர் சங்கத்தில் உறுப் பினரானார். கட்சி ஆதரவாளராக இருந்த கிருஷ் ணமாச்சாரி மதுரையில் கட்சித் தோழர்கள் ஆர். கிருஷ்ணன்(இவரைப்பற்றிய கட்டுரை களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டா வது தொகுப்பில் இடம்பெற்றுள்ளது), தண்ட பாணி ஆகிய இருவருடனான உரையாடல் களாலும், அவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
கோவைக்கு மாற்றலாகி வந்த தோழர் கிருஷ்ணமாச்சாரி கட்சி அலுவலகத்திற்குச் சென்று தோழர்கள் கே. ரமணி, பூபதி, பாலன் ஆகியோரைச் சந்தித்தார். அவர்களின் வழிகாட்டுதலுடன் 1966ல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தார். சங்கத்திலும், கட்சியிலும் ஆர்வத்தோடு செயல்பட்ட இவர் 1967ல் எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1972ல் சங்கத்தின் கோட்டப் பொதுச் செய லாளராகத் தேர்வு செய்யப்பட்டு அப்பொறுப் பில் 1983 வரை செயல்பட்டார். 1983லிருந்து 1993 வரை சங்கத்தின் கோட்டத் தலைவராகவும் பணியாற்றினார். ஒன்றிய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தை கணினிமயமாக்கி, ஆட்குறைப்பு செய்திட முயற்சி செய்தது. நாடு முழுவதும் எல்.ஐ.சி கணினிமயத்தை எதிர்த்துத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஊழியர்களைப் பங்கேற்க வைப்பதில் தோழர் கிருஷ்ணமாச்சாரி முனைப்புடன் செயல்பட்டார். 1966ல் இந்திரா காந்தி எர்ணாகுளம் நகரத்திற்கு வந்தபோது, கோவையிலிருந்து 3 பேருந்துகளில் ஊழி யர்கள் எர்ணாகுளம் சென்று மறியல் போராட்ட த்தில் கலந்து கொண்டதை நினைவுகூர்கிறார். இத்தகைய போராட்டத்திற்கு பிறகு கணினி மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட் டது. 1986ம் ஆண்டு தேவையின் அடிப்படை யில் கணினியைக் கொண்டு வரலாம் என்ற ஒப்பந்தம் சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்டது.
நிர்வாகத்தின் பழிவாங்கல்
1974ம் ஆண்டு எல்.ஐ.சி. ஊழியர்களின் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்த கிருஷ்ணமாச்சாரி தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்தின் பழிவாங் கும் நடவடிக்கையால் பின்வாங்கிடாமல் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தார். 23 நாட்களுக்குப் பிறகு வேலையில்சேர்ந்தார். அக்காலத்தில் எல்ஐசி கோவை கோட்டம் என்பது பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளையும் தற்போதைய சேலம் கோட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்திருக் கிறது. கோட்ட பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பொறுப்பிலிருந்த காலத்தில், 1990களின் முற்பகுதியில் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக செயல் பட்டார். கோட்டத்தின் எல்லா கிளைச் சங்கப் பேரவைக் கூட்டங்களிலும் கலந்துகொண்ட வர். நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கோவை கோட்டத்தில் கோவையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் அங்கம் வகித்த முதல் கட்சிக் கிளையை உருவாக்கினார். சங்கம், கட்சிப் பணிகளில் தோழர் ஏ.ஆர். கல்யாணசுந்தரம் தன்னுடன் இருந்து முக்கியப் பணியாற்றிய தாக நினைவு கூர்கிறார். சங்கப் பணியோடு கட்சிப் பணியிலும் முனைப்போடு செயல்பட்ட கிருஷ்ணமாச்சாரி, கட்சியின் கோவை மாவட்டக் குழுவுக்கும் பிறகு மாவட்டச் செயற்குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். அக்காலத்தில் கட்சி நடத்திய எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்ட தாக நெகிழ்வுடன் குறிப்பிடுகிறார். அதுவரை யில் கட்சியில் அரங்கப் பொறுப்பு, நிதிப் பொறுப்பு, மையப் பொறுப்பு ஆகிய பணி களை ஏற்றுச் செய்துள்ளார். 1998ம் ஆண்டு எல்.ஐ.சி வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். கட்சியின் மாவட்டக் குழுவில் இருந்து 2007ல் விடுவிக்கப்பட்டார்.
கிருஷ்ணமாச்சாரியின் பணிகள் பற்றிக் குறிப்பிட்ட சங்கத்தின் கோட்ட நிர்வாகிகளில் ஒருவரான தோழர் சுரேஷ், “என்னையும், தற் போது கோட்ட நிர்வாகிகளாக உள்ள அனை வரையும், இன்னும் பலரையும் கட்சிக்குக் கொண்டு வந்தவர் அவர்,” என்கிறார். கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் பிரச்சாரம் செய்து போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிப் போரை கட்சி உறுப்பினர்களாக்கும் பணியை திறம்பட செய்தவர் தோழர் கிருஷ்ணமாச் சாரி. கருத்தியல் ரீதியிலான பணியைச் செய்ய ஒருவருக்கு பரந்த வாசிப்பு அவசியமாகிறது. அவருடைய வாசிப்பைப் பற்றிக் கேட்ட போது, வீட்டின் முதல் மாடியில் இருக்கக் கூடிய நூலகத்தை என்னை அழைத்துச்சென்று காட்டினார். ஓர் அறை முழுவதும் நூல்கள். இப்போதும் நூல்களை வாசிப்பதோடு தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஒர்க்கிங் கிளாஸ், வாய்ஸ் ஆப் தி ஒர்க்கிங் உமன் ஆகிய இதழ்களை வாங்குகிறார், படிக்கிறார். தோழர் கிருஷ்ணமாச்சாரியுடன் அவரது வீட்டிற்குச் சென்று உரையாடிக்கொண்டி ருந்தபோது,
அவரது மகள் பிரபா, “அப்பா பணியில் இருந்த போதும், ஓய்வுபெற்ற பிறகும் (10 ஆண்டுகளுக்கு முன்பு வரை) இரவு 10 மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார்” எனக் கூறினார். இப்போதும் தனது அப்பா ஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியர்கள் கட்சி கிளைக்குச் செயலாளராக இயங்கிவருவதாகக் கூறினார். எல்.ஐ.சி ஊழியரான பிரபா தனது தந்தையின் சங்கப் பணியையும், கட்சிப் பணியையும் பார்த்து தானும் கட்சி உறுப்பினரானதாகக் கூறினார். 1971ல் கிருஷ்ணமாச்சாரி - கமலா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். கமலாவும் எல்ஐசி ஊழியர்தான். ஐதீகமோ சடங்கோ இல்லாமல் தங்களது திருமணம் நடைபெற்றது எனப் பெருமையுடன் குறிப்பிடு கிறார். இணையர் கமலா சங்கத்தின் பேரவைக் கூட்டங்களிலும் போராட்டங்களி லும் கலந்துகொண்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்தான் தோழர் கமலா உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
77வயதில் முனைவர் பட்டம்
தோழர் கிருஷ்ணமாச்சாரி பரந்த வாசிப்பா ளர். ஓய்வுபெற்ற பிறகு, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் இணைந்து எம்.ஃபில் பட்டம் பெற்றார். அதன் பிறகு பாரதியார் பல்கலை க்கழகத்தில் நேரடி மாணவராகச் சேர்வதற்கு தொடர்ந்து போராடி அதில் வெற்றிபெற்று, நான்காண்டு காலம் உழைத்து தனது 77வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் “இன்ஃபுளு யென்ஸ் ஆஃப் ஷெல்லி ஆன் மார்க்ஸ்” (மார்க்ஸ்சிடம் ஷெல்லியின் தாக்கம்) என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தொழிற்சங்கப் பணிகளைச் செய்தபோது, தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டதை யோ, தொடர்ந்து நிர்வாகம் மெமோ, விசா ரணை என அலைக்கழித்ததையோ இவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இவர் பணியாற் றிய கோட்டத்தில் சங்கமும், சங்க உறுப்பினர் களிடையே கட்சியும் இப்போதும் துடிப்பாகச் செயல்படுவதற்குத் தோழர் கிருஷ்ணமாச்சாரி யின் பங்களிப்பு அடித்தளமாக அமைந்திருக் கிறது எனில் சற்றும் மிகையல்ல. தற்போது 85 வயதாகும் தோழர் கிருஷ்ணமாச்சாரி கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஈடுபாட்டு டன் சங்கப் பணியும் கட்சிப்பணியும் ஆற்றி வருவது பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.