tamilnadu

img

அடிப்படை வசதியை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதியை நிறைவேற்றக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 22-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி சோலை நகர் பகுதியில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி, புதன்கிழமை வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் முன்பு வட்டக் குழு உறுப்பினர் அறிவழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்ட குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணி, டி. முருகேசன், டி. சீனிவாசன், பி.  செல்வராஜ் மற்றும் பி. ராஜேந்திரன், ஏ. பாஸ்கரன், எம். பொன்னுமணி, ஜி. பெரியசாமி, பி. பரத் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.எம். சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.  இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளித்தனர்.  மனுவை பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கிளைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.