கடலூர், டிச.29- மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 23ஆவது மாநாடு டிசம்பர் 28,29 தேதிகளில் வடலூரில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசி னார். மாநாட்டை வாழ்த்தி மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன், மாநாட்டை நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் உரை யாற்றினர். மாநாட்டில், கட்சியின் மாவட்டச்செயலாளராக கோ.மாதவன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறு ப்பினர்களாக டி.ஆறுமுகம், வி.உதயகுமார், எம்.மருத வாணன், பி.கருப்பையன் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வி.சுப்பு ராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ். அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்தி ரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகிய 13 பேர் கொண்ட செயற்குழு உள்ளிட்ட 40 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்
மழை வெள்ளத்தால் சேத மடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும், கடலூர் முதுநகரில் இருந்து அதி காலை சென்னைக்கு செல்ல புதுவை வழியாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கடலூரில் இருந்து புதுவை வழியாக சென்னை செல்ல புதிய இருப்புப்பாதை அமைக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள 2.5 லட்சம் குடிசை வீடுகளை மாற்றி கான்கிரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும். சட்டம் ஒழுங்கு, வழிப்பறி, கொலை, கொள்ளைகளை தடுக்க வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சாலை களில் ஏற்படும் சுற்றுச்சூழ லை பாதுகாக்க வேண்டும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும், மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 37 தீர்மனங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.