தூத்துக்குடி, ஜூன் 30- தூத்துக்குடியில் கடலோர காவல்படை சார்பில் தெர்மல் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தூத்துக்குடியில் கடலோர காவல்படையின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு தெர்மல் நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கடலோர காவல்படை டிஎஸ்பி ராஜ் தலைமை தாங்கினார். இதில் தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் நவீன், சப்இன்ஸ்பெக்டர் ஜானகிராமன்,வசந்தகுமார்,தூத்துக்குடி இந்திய கடலோர காவல் படை சந்திரன், கிஷோர், சச்சின் மற்றும் ஊர்க்காவல்படையினர் உட்பட மொத்தம் 40 பேர் கலந்து கொண்டனர்.