சென்னை,ஜன.10- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை வரும் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் 70,000 சதுர அடி பரப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணி கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 70,000 சதுர அடியில் பிர ம்மாண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை வரும் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைக்க உள்ளார். சென்னை யில் இதற்கான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதுகலை, முனைவர், முனை வர் பட்ட மேலாய்வு உள்ளிட்டவற்றில் செம்மொழித் தமிழைக் கற்கவும், ஆராய்ச்சி மேற் கொள்ளவும் தேவை யான வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களை பதிப்பித்து வெளியிடுதல், பழந்தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வரும் நிலையில், மின்னணு நூலகம், இலக்கியம், மொழி யியல், மொழிபெயர்ப்பு, அகராதி யியல், நாணயவியல் உள்ளிட்ட 12 புலங்களுடன் புதிய கட்டடம் தயா ராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.