சென்னை,பிப்.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப்.13) கேள்வி நேரத்தின் போது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ சில கருத்துக்களை தெரிவித்தார். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை பழைய கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கொண்டு வந்து இறக்கிவிடவேண்டும என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னைக்குள் வெளியூர் பேருந்து கள் வந்து செல்வதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால்தான் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அரைகுறை யாக இருந்த அந்த திட்டத்தை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி முழுமையாக செயல் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது” என்றார். கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தில் இருந்து பயணிப்பவர்கள் யாரும் பிரச்சனை எழுப்புவதில்லை. வேறுசிலர்தான் அந்த பிரச்ச னையை எழுப்பி வருகிறார்கள். தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு எந்த பிரச்ச னையும் இல்லை என்றும் நாள் தோறும் அங்கிருந்து எத்தனை பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின் றன என்ற விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
தென்மாவட்டங்களுக்கு கிளாம் பாக்கத்தில் 80 விழுக்காடு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தி லிருந்து 20 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து களும் கிளாம்பாக்கம் வந்துதான் செல்கின்றன. இந்த நிலையில், பேருந்துகள் பற்றாக்குறை, அடிப் படை வசதிகள் இல்லை என்று சொல்வது தவறான தகவல். விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தை பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு மாற்றப் படும்போது இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தன என்றும் அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கிளாம்பாக்கத்தில் 100 கோடி ரூபாய் செலவில் பணிகளை இந்த அரசு மேற்கொண்டது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எளிதாக வந்துசெல்லும் வகையில் 6 மாதத்திற்குள் ரயில் நிலையம் அமைக்கப்படும். கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை. வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். துங்குவோரை எழுப்பலாம் துங்குவோர் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது என்றும் அவர் கூறினார். இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பி னர்கள் கொண்ட குழுவை கிளாம் பாக்கத்திற்கு நேரில் அழைத்து செல்கிறோம். ஆய்வு செய்யுங்கள். பிறகு, என்னென்ன வசதிகள் தேவை என்று கூறுங்கள். அதையும் அரசு செய்து கொடுக்கும்” என்று கூறி னார். முன்னதாக பேசிய எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சிறுசிறு பிரச்சனை கள் தான் இருக்கின்றன. அதை சரி செய்யவேண்டும் என்றுதான் அதிமுக கோருகிறது என்று திடீரென ‘பல்டி’ அடித்தார். அப்போது குறுக்கிட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “கிளம் பாக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மட்டுமல்ல, பெரிய பிரச்சனைகள் இருந்தன. அது தீர்த்து வைக்கப் பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் சிறிய பிரச்சனை களைகளும் தீர்த்து வைக்கப்படும்” என்றுகூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.