தமிழ்நாடு சட்டமன்றத்தில் 25.6.2024 ஆம் தேதியன்று போக்குவரத்து மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்னதுரை, ‘போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியளிக்க வேண்டும். தொழிலாளர் பிரச்ச னைக்குத் தீர்வுகாண வேண்டும். காண்ட்ராக்ட் முறை, தனியார்மயம் கூடாது’ என வலியுறுத்தி யுள்ளார். விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்தபோது, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி சம்பந்தமாகவோ, தொழி லாளர்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பது சம்பந்தமாகவோ எவ்வித பதிலும் சொல்ல வில்லை. தனியார்மயம், காண்ட்ராக்ட் ஒப்பந்தம் சம்பந்தமாக அமைச்சர் பேசியதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போக்குவரத்துக் கழகங்கள் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பொதுத்துறை நிறுவன மாகும். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டிலும் பணிபுரியும் 1,20,000 ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வுகாண அரசின் திட்டம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
போதுமான நிதியுதவி இல்லை
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மற்ற மாநிலங்களைவிட மிகக்குறைந்த கட்ட ணத்தில் பேருந்துகள் இயக்குவதுடன், லாபம் இல்லை என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை கிராமப்புற, மலைவழித்தடங் களில் இயக்குகின்றன. மாணவர்கள், பெண் களுக்கு கட்டணமில்லா சேவைகள் காரணமாக, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகமாவதற்கும் காரண மாகின்ற போக்குவரத்துக் கழகங்களின் உற்பத்தித் திறனும், தொழிலாளர்களின் உழைப்பும் சிறப்பானது என்று அமைச்சரே பாராட்டியுள்ளார். கழகங்களின் நிதி இழப்பிற்கு தொழிலாளர்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை. போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கம் இல்லாமல் சேவைத்துறையாக இயங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் இழப்பை அரசுதானே ஈடுகட்ட வேண்டும்! போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த திமுக ஒரு குழு அமைத்து பரிந்துரைகளை உருவாக்கி, 2018ஆம் ஆண்டு அதிமுக அரசிடம் வழங்கியது. அந்தப் பரிந்துரைகளை இப்போது திமுக அரசு அமல்படுத்த வேண்டாமா? 2022ஆம் ஆண்டு முதல் வரவுக்கும், செல விற்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என திமுக அரசு வந்தவுடன் அரசாணை வெளியிட்டது; அரசாணை வெளியிட்டு மூன்றாண்டுகள் ஆன பின்பும், இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்கப்பட வில்லையே!
தொழிலாளர் பணத்தைக் கேட்கிறோம்!
அரசு உரிய நிதி வழங்காமல், தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்த வைப்புநிதி உள்ளிட்ட பிடித்தங்களை உரிய கணக்கில் சேர்க்காமலும், சட்டப்படி பணிக்கொடை நம்பகத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமலும் போக்குவரத்து நிர்வாகங்கள் அலட்சியம் காட்டு வது சட்டவிரோதமல்லவா? இதை அரசு தடுக்க வேண்டாமா? கழகங்கள் செலவு செய்த தொழி லாளர்களின் பணம் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 7000 கோடியாக இருந்தது; தற்போது இந்த 3 ஆண்டுகளில் மேலும் ரூ. 8000 கோடி செலவு செய்யப்பட்டுவிட்டது. சுமார் ரூ.15000 கோடி தொழிலாளர் பணத்தை செலவு செய்தது எப்போது திருப்பி வழங்கப்படும்?
வெறுங்கையுடன் அனுப்பலாமா?
வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை போன்ற சட்ட ரீதியான பணம் போக்குவரத்துக் கழகங்களால் போக்குவரத்துக்கு உரிய கணக்கில் செலுத்தப்படாததால், ஓய்வுபெறும் தொழிலாளர் வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். 18 மாத காலமாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் இதைக் கண்டித்து வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலை நிறுத்தங்களை திமுகவும் ஆதரித்தது. இப்போது 18 மாதங்களாக ஓய்வுக்கால பலன் வழங்கப்படாமல் உள்ளது சம்பந்தமாக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா? ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 104 மாதமாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை மறுத்து, அதிமுக அரசு போட்ட அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், தொடர்ந்து தற்போதும் அரசு மேல்முறையீடு செய்வது ஏன்? சென்ற ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது கழகங்களே அகவிலைப்படி உயர்வைத் தர வேண்டும் என சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் வலியுறுத்தியபோது, “முதல்வர் அறிவிப்பார்” என அமைச்சர் கூறினார். இதுவரை அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுவதற்கு அமைச்சர் என்ன நியாயம் கூறப்போகிறார்? ஓய்வூதிய நம்பகத்தில் ஏற்படும் பற்றாக் குறைக்கு அரசு நிதி வழங்கும் என மூன்று ஒப்பந்தங்களில் சரத்து உருவாக்கப்பட்டது. 2022இல் அமைச்சர் முன்னிலையில் இறுதிப் படுத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் இந்த சரத்து உள்ளது. இந்த ஒப்பந்த சரத்தை இதுவரை அமல்படுத்தவில்லையே? அரசுக்கு நிதிச்சுமை உள்ளது எனக் கூறி, ஓய்வுபெற்ற வயதான ஊழி யர்களின் பணத்தைத் தர மறுப்பது நியாயமா? நிதிச்சுமையை அரசால் தாங்க முடியாதபோது, ஓய்வுபெற்ற ஊழியர்களால் தாங்க முடியுமா? எனவே, அரசு இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
காண்ட்ராக்ட் முறை
காண்ட்ராக்ட் அடிப்படையில் செய்யப் பட்ட பணியாளர் நியமனம் தற்காலிகமானது தான் என்கிறார் அமைச்சர். 25,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. 1100 பேர் எடுக்கத் தானே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதி காலிப்பணியிடங்களை நிரப்ப எப்போது அர சாணை வெளியிடப்படும்? அதிமுக அரசால் போடப்பட்ட 8 அரசாணைகளில் போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரமாகவே ஒப்பந்த தொழி லாளர் முறை தான் என்று கூறப்பட்டுள்ள நிலை யில், அந்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டாமா? ஓராண்டிற்கும் மேலாக இந்த அரசாணைப்படி சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனரே? எனவே, ஒப்பந்த தொழிலாளர் முறை தற்காலிகம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரந்தரமாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார்மயம்
போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் இல்லை என அமைச்சர் கூறுகிறார். ஆனால், கொள்கை விளக்க குறிப்பில் ‘கிராஸ்காஸ்ட் காண்ட்ராக்டிஸ் சிஸ்டம்’ என்று கூறப்பட்டிருப்பது தனியார்மயம் தானே? கழக வழித்தடங்களில் தனியாரை அனுமதிக்கலாமா? மினிபஸ் என்பதும் கழக வரு வாயை பாதிக்கும் அல்லவா? நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனியார்மயம் கூடாது. திரா விட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞரால் உருவாக்கப்பட்ட கழகங்களை பலவீனப் படுத்தும் எந்த நடவடிக்கையும் அரசு செய்யக் கூடாது.
கையெழுத்திடாவிட்டால் கோரிக்கை வைக்கக் கூடாதா?
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்.சின்னதுரை எம்எல்ஏ கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் “சென்ற ஒப்பந்தத்தில் சவுந்தரராசன் கையொப்பமிட வில்லை. சிஐடியு ஒப்பந்தத்தில் கையெழுத்திடா மல், இப்போது ஒப்பந்த கோரிக்கை கேட்பது ஏன்” என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். “3 ஆண்டு ஒப்பந்தத்தை 4 ஆண்டாக மாற்றுவதையும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பதை யும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்சனை களை சரிசெய்யாவிட்டால், ஒப்பந்தத்தில் கை யெழுத்திடமாட்டோம்” என அமைச்சரிடம் தெரி வித்தோம். அரசின் நிலையில் மாற்றமில்லாத காரணத்தால்தான், ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்திடவில்லை. அமைச்சரிடம் அறி வித்துவிட்டுத்தான் பேச்சுவார்த்தை அரங்கை விட்டே வெளியே வந்தோம். ஏன் கையெழுத்திட வில்லை என்பது அமைச்சருக்கு நன்றாக தெரியும். எதுவும் தெரியாததுபோல் அமைச்சர் பேசுவதுதான் ஆச்சர்யம். போக்குவரத்துக் கழ கத்தில் இதுவரை 14 ஒப்பந்தங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த 14 ஒப்பந்தங்களில் 9 ஒப்பந்தங் களில் சிஐடியு கையெழுத்திடவில்லை. தொமுச 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. எந்த அமைச்சரும் சிஐடியுவையோ அல்லது தொமுசவையோ பார்த்து, “போன ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை, இப்போது ஏன் கோரிக்கை வைக்கிறீர்கள்” என்று கேட்ட தில்லை. அமைச்சர் எப்படி கேட்கின்றார் என்பது புரியவில்லை.
நியாயமற்ற பதில்
எனவே, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வும் அரசு முன்வர வேண்டும். ஊதிய பேச்சு வார்த்தையைத் துவக்கி ஒப்பந்தத்தை உருவாக்க அமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.