tamilnadu

img

பொதுவிநியோகத் திட்டத்தை தனித்துறையாக்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

பொதுவிநியோகத் திட்டத்தை  தனித்துறையாக்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.24-  தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியர் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களில் புதுக்கோட்டை மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ப. செல்வராசு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா கண்டன உரையாற்றினார்.  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி. மாரிக்கண்ணு, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர். மாரிக்கண்ணு, துணைத் தலைவர்கள் ப. காலா, எஸ். கோமதி. சிபிஎம் மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு அரச தேர்தல் வாக்குறுதிப்படி பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்க வேண்டும். பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அனைவருக்கும் முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். 3 சதவிகிதம் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.