tamilnadu

img

தூய்மை காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மை காவலர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மே 22-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரசு மருத்துவமனையில் 8 ஆண்டு காலமாக பணி செய்து வந்த தூய்மை காவலர்கள் இருவரை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்திட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாதவன், சரவணன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் மாரியப்பன், மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மாவட்டப் பொருளாளர் ராமானுஜம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ராமகுரு உள்ளிட்டோர் உரையாற்றினர்.