அவிநாசி, ஏப்.4- நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் அழிவை நோக்கிச் செல்லும் அபாயத்தில் உள்ளது. இத்தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக இப்பிரச்ச னையில் தலையிட்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் அவிநாசியில் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில ப்பொதுச் செய லாளர் சந்திரன், மாநில பொருளாளர் அசோகன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒன்றிய அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கை காரணமாக, விசைத்தறி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும், நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. ஏற்கனவே ஒரு கிலோ நூல் விலை ரூ.55 உயர்ந்ததால் மாநில அள வில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் நூல் விலை இந்த மாதம் 35 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் தொழில் நடத்த முடியாத நிலையில் உள்ளனர். தொழி லாளர்களும் வேலை இழப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. ஆகவே, வேலை இழந்த தொழிலா ளர்களுக்கு நிவாரணம் வழங்கு வதோடு, உடனடியாக நூல் விலையை குறைக்கவும் ஒன்றிய அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவையில் அகில இந்திய சிறப்பு மாநாடு
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனை குறைக்கக் கோரியும், அகில இந்திய அளவில் டெக்ஸ்டைல் மற்றும் பவர்லூம் அகில இந்திய சிறப்பு மாநாடு 2022 மே 17 ஆம் தேதி யன்று கோவையில் நடைபெற உள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்துவது எனவும், விசைத்தறி சம்மேளனத்தின் 3 ஆவது மாநில மாநாடு வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தில் நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.