திருச்சிராப்பள்ளி, ஏப்.1- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் புங்கே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2012-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் அமைத்ததற்காக 150 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து சிஐடியு தொழிற் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை யில் ஆர்ப்பாட்டம், மறியல், பேரணி, உண்ணாவிரதம், கஞ்சி காய்ச்சும் போ ராட்டம் என பலக்கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து தாசில்தார், ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர், தொழிலா ளர் நலத்துறை அதிகாரிகள் என பலக்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும், புங்கே நிர்வாகம் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் மற்றும் வேலை வழங்க மறுத்துவிட்டது. பின்னர் கடந்த 2012-ஆம்ஆண்டு சிஐடியு சார்பில் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் வேலை வழங்கக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொ டுக்கப்பட்டது. இதில் தொழிலாளர் நலத்துறை ஆணையம் சம்பந்தப் பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவா ரணம் மற்றும் வேலை வழங்க நட வடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தொழிலாளர் நலத் துறை ஆணையர் தலைமையில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 44 தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் காசோ லையாக வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழி லாளர் நலத்துறை ஆணையர் தனபால் முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்படிக்கையை புங்கே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மனித வள மேலாளர் ஸ்ரீவத்ஸன் முன்னிலை யில், சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செய லாளர் வேலுச்சாமி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோரிடம் மார்ச் 30 அன்று வழங்கினர். பின்னர் 44 தொழிலாளர்களுக்கும் தனித்தனியாக அவரவர் பெயரில் நிவாரணத் தொகை காசோலை யாக வழங்கப்பட்டது. சிஐடியு தொழிற் சங்கம் கடந்த 11 வருடங்களாக நடத்திய தொடர் போராட்டத்தின் கார ணமாக தொழிலாளர்களுக்கு நிவார ணம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.