tamilnadu

img

நாட்டிலேயே சிறந்த வசதிகளை கேரளா வழங்குகிறது

ஹைதராபாத், ஜன.9- முதலீட்டாளர்களுக்கு நாட்டி லேயே சிறந்த வசதிகளை கேரளம் செய்து தருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். கேரளாவுக்கு முதலீடுகளை வர வழைப்பது தொடர்பாக தெலுங்கா னாவில் தொழில் அதிபர்களுடன் நடத்திய சந்திப்பின் போது முதல்வர் இதனைத் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் பார்க் ஹயாட்டில் ‘இன்வெஸ்ட்மென்ட் ரோடு ஷோ’ என்கிற முதலீட்டாளர்கள் சங்கமம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:  கேரளம் இப்போது எதிர்பார்த் திருப்பது சிறப்பான பங்கேற்பைத் தான். நாட்டிலேயே சிறந்த வசதிகளு டன் ஒப்பிடக்கூடிய வசதிகளை முத லீட்டாளர்களுக்கு வழங்க முடியும் என்று கேரளா நம்புகிறது. கேரளா வில் வேறு எங்கும் காண முடியாத  வலுவான முதலீட்டு நட்புக் கூறுகள் உள்ளன.

இந்த இடம் தனித்துவமான இயற்கை வளங்களால் ஆசீர் வதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராள மான நீர் மற்றும் சுத்தமான, சுகா தாரமான சூழல் உள்ளது. நாட்டி லேயே அதிக கல்வியறிவும் பயிற்சி யும் பெற்ற தொழிலாளர்களை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக் கூடிய தரத்தில் கேரளாவால் வழங்க முடியும் என்று முதல்வர் கூறினார். கேரளம் தற்போது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அற்புதமான, ஆற்றல்மிக்க கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு தீங்கு விளை விக்காத தொழில்களுக்கு அதிக முத லீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் சிறந்த முதலீட்டு நட்பு மாநிலமாக கேரளா மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த இலக்கை அரசு உறுதி யுடனும் அக்கறையுடனும் அடையும் என்றார். கேரளாவின் வளர்ச்சிக் கனவுகளில் பங்கேற்பதற்கும், வளர்ச்சிப் பணிகளை உறுதி யான நோக்கத்துடனும் வலுப்படுத்த வும், விரிவான, அனைத்து நிலை முன்னேற்றத்தை அடைய வருமாறு தொழில்துறையினருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜான் பிரிட்டாஸ் எம்.பி பேசுகையில், கேரளாவை பற்றி பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றார். கேரளாவில் நல்ல முத லீட்டுச் சூழல் நிலவுவதாகவும் கேர ளாவின் வளர்ச்சிப் பணிகளை பாராட்டியும் அயோத்தி ராமி ரெட்டி எம்.பி பேசினார்.

முதலமைச்சரின் கீழ் கேரளாவின் சாதனைகளைப் பாராட்டிய ராமி ரெட்டி, லைஃப் மிஷன் உள்ளிட்ட பணிகளை சுட்டிக் காட்டினார். பினராயி விஜயன் தலை மையில் கேரளாவில் முதலீடுகளை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். கூட்டத்தில் கேரளாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயோ-டெக்னாலஜி, தகவல் தொழில் நுட்பம், மருந்து மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளில் மாநி லத்தின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய குறிப்பு தொழில்முனை வோருக்கு வழங்கப்பட்டன. மாநிலம் மேற்கொண்டுள்ள சட்டச் சீர்திருத்தங் கள், டிஜிட்டல் மாற்றம், நடைமுறை களை எளிமைப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு ஆகியவற்றையும் அவர்ளுக்கு விளக்கி கூறப்பட்டன. கேரளாவின் முதலீட்டாளர் நட்பு சூழ்நிலையை தொழிலதிபர்கள் வரவேற்றனர். சிஐஐ, ரியல் எஸ்டேட் கூட்டமைப் பான க்ரெடாய் உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருந்துத் துறை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறு வனங்களின் தலைவர்கள் மற்றும்  இதர முதலீட்டாளர் கலந்து கொண்ட னர். தலைமைச் செயலாளர் டாக்டர். வி.பி.ஜாய் வரவேற்றார். தொழில் துறை முதன்மைச் செயலர் டாக்டர். கே.இளங்கோவன், கே.எஸ்.ஐ.டி.சி., செயல் இயக்குனர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா ஆகியோர் பேசினர்.