தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (மே 7) மரியாதை செலுத்தினார். திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.