சென்னை,நவ.25- “திருப்பூர், கரூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:- சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ரூ.2 கோடியே 50 லட்சம் அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறையின் கீழ் இயங்கும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.2,500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அர சாணை வெளியிடப்பட உள்ளது. புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள் கையை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா
விருதுநகர் மாவட்டம், குமார லிங்கபுரம் கிராமத்தில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் மூலம் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2ஆவது பெரிய மாநிலமாக திகழ்கி றது. 4 பெரிய பன்னாட்டு விமான நிலை யங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள், 3 பெரிய துறை முகங்கள், 19 சிறிய துறைமுகங்களை கொண்டுள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரத்து 510 கி.மீ நீளமுள்ள சாலை வழி வசதியைக் கொண்டு முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர் ்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது. ஜவுளித் துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது. வேளாண் மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கு வதாக ஜவுளித் தொழில் உள்ளது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணிவகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன. இது நாடு முழுவதும் உள்ள நூற்பாலை களில் 55 விழுக்காடு ஆகும். இந்தியாவிலுள்ள விசைத்தறி களில் 23 விழுக்காடு விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன. சுமார் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளித் துறையின் எதிர்காலமே தொழில்நுட்ப ஜவுளி களின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.
மெகா ஜவுளி நகரம்
தமிழ்நாட்டில் உலகத் தரத்தின் மெகா ஜவுளி நகரம் உருவாக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூ. 30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க வும் திட்டமிட்டுள்ளோம். ரூ.10 கோடி யில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறு விடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் “ஏற்றுமதி மையங்கள்” அமைக்கக் கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம் இவ்வாறு அவர் பேசினார்.