tamilnadu

img

சாகித்ய அகாடமி விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

சென்னை, ஜூன் 15- தமிழில், சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால  சாகித்ய புரஸ்கார்’ விருது எழுத்தாளர்  யூமா வாசுகிக்கும், ‘யுவ புரஸ்கார்’  விருது எழுத்தாளர் லோகேஷ் ரகு ராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படைப்பாளிகள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக  வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாவல், கவிதை, சிறுகதை  என அனைத்து வடிவங்களிலும் தமி ழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி.  ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப் புக்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வி யின் பிறந்தநாள்’ நூலுக்காக பால  சாகித்ய புரஸ்கார் க்கும் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமி ழில் இன்னும் வளம் பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர்  ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்க ளிப்புக்கான உரிய அங்கீகாரம் இது, வாழ்த்துகள். காவிரிக்கரையில் இருந்து மற்றொரு இலக்கிய வரவாக தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்கார்’க்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகு ராமனுக்கும் எனது பாராட்டுகள்” என்று முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.