சென்னை, மார்ச் 24- என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் தலையீட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெள்ளி யன்று (மார்ச் 24) நேரமில்லா நேரத்தில், என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாகைமாலி சிபிஎம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் விவ சாயிகள் மற்றும் அந்தப் பகுதி நில உரிமையா களர்களுக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றாமல் உதாசீனப்படுத்தி வரு கிறது. சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கொடுத்த மக்களுக்கு முழுமையான இழப்பீடு, நிரந்தர குடியிருப்புடன் மாற்று இடம், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்ற வாக்கு றுதியை இதுவரை நிறை வேற்றவில்லை. இதற்காக போராட்டம் நடத்தினால் காவல்துறையை தனது கையில் வைத்துக்கொண்டு பதற்றத்தை உருவாக்கி வரு கிறது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையீட்டால் மட்டுமே முடிவுக்கு கொண் டுவரமுடியும். எனவே, இதில் முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வேல்முருகன் (பண்ருட்டி): என்எல்சி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செய லாளர், அமைச்சர்கள் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த கூட்டங் களில் வழங்கிய அறிவு ரைகளை நடைமுறைப்படுத் தாமல், காவல்துறை மூலம் மக்களை விரட்டியடிக் கின்றனர்.
தமிழ்நாட்டை அழிக்கும் பாஜக!
ஜி.கே.மணி (பாமக): தற்போது வேலைக்கு ஆள் சேர்த்ததில் என்எல்சி நிர்வா கம் இதுவரைக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும் வேலை கொடுக் காமல் புறக்கணித்துள்ளது. இவ்வளவு ஏன்? தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஒரு வருக்குகூட வேலை தராமல் பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை அழித்து ஒழிக்க முடிவு செய்துள்ளது. இதில் இந்த நிலையில், 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயி களிடம் இருந்து கையகப் படுத்தி தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்தி ருக்கிறார்கள். இதை மாநில அரசு கைவிட வேண்டும். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நவரத்தின நிறுவனம் என்ற பெயர் எடுத்திருக்கும் என்எல்சி, பலமுறை வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இது வரைக்கும் ஒன்றைகூட முழுமையாக நிறை வேற்றவில்லை. மேலும் மேலும் நிலத்தை கைய கப்படுத்துவதால்மண் வளமும், நீர்வளமும் பாதிப் பதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தர விடவேண்டும். இல்லை எனில், இதனால் அந்த பகுதி யில் 5 மாவட்டங்கள் பாலை வனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. சிந்தனைசெல்வன் (விசிக): விவசாயிகள் மற்றும் நில உரிமை யாளர்களிடம் இருந்து நிலத்தை எடுப்பதற்கு மட்டும் தமிழ்நாடு அரசின் உதவி தேவைப்படுகிறது. அதன் பிறகு, கார்ப்பரேட் அலுவல மாக மாறிவிடுவதால் கோரிக்கை மனு கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. காரணம், அவர்களின் பாதுகாப்புக்கு தொழில்பாதுகாப்பு படை நிறுத்தப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு பிரதிநிதி ஒருவரை இயக்குநராக நியமிக்க வேண்டும். இவ்வாறு உறுப்பி னர்கள் பேசினர்.