ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் 1000 இடங்க ளில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக் கும் வகையில் ‘முதல்வர் மருந்த கங்கள்’ திங்களன்று (பிப்.24) திறக்கப்பட உள்ளன. பாண்டி பஜாரில் அமைக்கப் பட்டுள்ள முதல்வர் மருந்த கத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணிக்கு திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களி லும் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்த கங்களும் திறக்கப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப் படுகின்றன. மதுரையில் 52, கடலூ ரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன. முதல்வர் மருந்தகங்களில் ஜென ரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச் சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்