சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் பேசியது வருமாறு:
மக்களின் நம்பிக்கையே 40க்கு 40 வெற்றி !
‘நாற்பதுக்கு நாற்பது’ என்ற வெற்றி யைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேர வைக்கு நாங்கள் வந்துள்ளோம். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலை ஞரின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலை யைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன். எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், விமர்சித்தும் தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். இந்த ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்து காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறி யடித்து, செய்கூலி சேதாரம் இல்லாமல் முழுமையான வெற்றியை வழங்கினார்கள். ஆளும் திமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி.
பாராட்டும் - நன்றியும்!
சட்டமன்றத் தேர்தலில், ‘வாக்களித்த மக்கள் - வாக்களிக்காத மக்கள்’ என்ற பாகு பாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம்!
வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திமுக அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.
மக்கள் மனதை வென்றது இந்தியா கூட்டணி !
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதி களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள். இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.
சாத்தான்குளம் மரணத்தை மறைத்தது அதிமுக!
கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டதும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தை யும் மக்களும், சட்டப்பேரவை உறுப்பினர் களும் நன்கு அறிவார்கள். இந்த விவ காரத்தில் நாங்கள் எதை மறைத்தோம் என்று அவர்கள் (அதிமுகவினர்) சிபிஐ விசார ணை கேட்கிறார்கள்? சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசார ணை கேட்டீர்களே என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு தான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அதிமுக அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால், அப்போது சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர் கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
கொடநாடு வழக்கு: இன்டர்போல் விசாரிக்க வேண்டும்!
கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள் ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சில ருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர் போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்!
இன்றைக்குத் தமிழ்நாடு அமைதி மிகு மாநிலமாக இருப்பதால்தான். வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது. காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசா ணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற அறிவிப்பு களும் விரைவில் அரசாணையாகும் என்று உறுதி அளிக்கிறேன். தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி யில், உள்கட்டமைப்பில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு உயர்ந்து வரு கிறது. அதன் தனித்தன்மையை தனிச் சிறப்பாக வளர்த்து வருகிறோம். இந்த வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. என்னை முதலமைச்சராக ஏற்றி வைத்து, ஒவ்வொரு துறையையும் தங்க ளது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் வளர்த்து வரும் எனது அருமை அமைச்சரவை சகாக்களால்தான். இந்த வெற்றியையும் உயர்வையும் பெற்று வரு கிறோம் என்பதை எப்போதும் மறக்காமல் சொல்லி வருகிறேன். அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறை பணியின் முக்கியத்துவம் என்ன?
குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்ட வகையில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கை கள் கடுமையாக இருக்கும் என்று உறுதி யளிக்கிறேன்.
வழக்குகள் வாபஸ் பெறப்படும்: சிபிஎம் கோரிக்கை ஏற்பு!
சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லா (மமக) மற்றும் எம். சின்னதுரை (சிபிஎம்) இருவரும் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் கடவுச் சீட்டு மற்றும் தடை யில்லாச் சான்று போன்றவைகளைப் பெறு வதில் சிரமம் ஏற்படுகிறது என்று தெரி வித்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற பல ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதமிருக்கும் வழக்குகள் குறித்தும் உரிய தரவுகள் பெற்று திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களை அறிவுறுத்தியிருக்கிறேன். விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் ஒரு புதிய தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் திருப்போரூர் பகுதியும், கடலோரப் பகுதியான கோவளமும் பயன்பெறும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்க கோ.க மணி கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கருத்துரு பெற்று விரைவில் தேர்தல் பணிப்படி வழங்கப்படும்.
அதிமுக புறக்கணிப்பு வருத்தமளிக்கிறது!
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்ப தாகவே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக் கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத் தான் அதிமுக தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி; மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அதிமுக. இவ்வாறு முதல்வர் பேசினார்.