tamilnadu

img

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்

சென்னை,மார்ச் 31- சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927 ஆம்ஆண்டு லண்டனில் அறிமுகம் செய் யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டு ஜார்ஜி யாவில் நடந்த 43-வது செஸ் ஒலிம்பியாட்டில் சீனா முதல் இடத்தை பிடித்தது. 44-வது செஸ் ஒலிம் பியாட் போட்டி இந்தியா வில் நடத்தப்படு கிறது. முதல் முறையாக இந்தியாவில்  இந்த போட்டி நடைபெறு கிறது. இந்த போட்டியை நடத்தும் பெருமையை சென்னை பெற்றுள்ளது. இந்த போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. உக்ரைன்-ரஷ்யா போரால்  அந்த போட்டி மாற்றப் பட்டது. பல நாடுகள் இந்த  போட்டியை நடத்த முயற் சித்த நிலையில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் சென்னையில் போட்டியை நடத்தும் வாய்ப்பு பெறப் பட்டது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சென் னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,“ ஜூலை 27 முதல் ஆகஸ்ட்  10 ஆம் தேதி வரை செஸ்  ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடை பெறுகிறது என்று அதிகாரப் பூர்வமாக தேதியை அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலை யில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த சரித்திரம் மிகுந்த போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் 75 கிராண்ட்  மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இதில் 25 கிராண்ட் மாஸ்டர் கள் தமிழகத்தின் தலை நகரான சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த அடிப்படையில் இந்தி யாவின் செஸ் தலைநகராக சென்னை இருக்கிறது என்றும் அமைச்சர் மெய்ய நாதன் கூறினார்.