tamilnadu

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்

சென்னை, ஜன. 1 - சென்னையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மதியத்திற்கு மேல் கனமழை பெய்தது. விடாமல் பெய்த  இந்த மழையால் முக்கிய  சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற் சியை கடலில் இருப்பதாக கணித்துவிட்டோம். நிலப்ப குதியில் இருந்ததை கணிக்க தவறிவிட்டோம். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த அளவுதான் கணிக்க முடிகிறது என விளக்கம் அளித்தது. சென்னை வானிலை மையத்தின் ரேடார்கள் சரி வர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன் வைத்து வரும் நிலையில், இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த திடீர் மழை அமைந்தது. இந்நிலை யில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச் சர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பெருமழைக்கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த முக்கிய விஷயத் தினை உங்கள் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகி றேன். பெருமழை, கடும்  புயல் போன்ற இயற்கை இடர் பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வுமையத் ்தின் அறிக்கையை சார்ந்திரு க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்தில் இருந்து  பெறப்படும் முன்னெச்சரிக் கைகள் மாவட்ட நிர்வாகத் தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாது காப்பை உறுதி செய்யவும் ஏதுவாகஅமைகிறது.

ஆனால் பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய  நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத் தால் வழங்க இயலாத நிலை உள்ளதை காண்கிறோம். உதாரணமாக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சென் னையில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர் வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, பெருமழை புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  மேம்படுத்தப்பட உரிய நட வடிக்கைகளை மேற்கொ ள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.