நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை, மே 17- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேரு வதற்கு ‘நீட்’ எனப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஒன்றிய பாஜக அரசு திணித்துள்ளது. அந்த வகையில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பு களுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 4 அன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கான 180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வை நாடு முழுவதும் 22 லட்சம் தேர்வர்கள், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் எழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி யிருந்தனர். இந்நிலையில், சென்னை ஆவடியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற போது, கனமழையால் மாலை 3 மணி முதல் 4.15 மணி யளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் முழுமையாகத் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருவள்ளூரைச் சேர்ந்த சாய் பிரியா, ஹரிஹரன் மற்றும் அக்ஷயா உள்ளிட்ட 13 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய் யப்பட்டிருந்தது. அதில், “மின் தடை காரணமாக கவ னச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை. கூடுதல் நேரமும் தர வில்லை. இதனால் மருத்துவப்படிப்பு என்ற கனவு சிறு குறைபாடுகளால் பாதித்து விடும். எனவே, மின் தடையால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு சனிக்கிழமையன்று விசார ணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வு முடிவு களை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. மேலும் இந்த வழக் கில் தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு பதில ளிக்கவும் உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கை ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.