சென்னை, ஏப்.8- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கி ணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை (ஏப்.8) ஹைத ராபாத்தில் இருந்து விமானப் படை யின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழ னிசாமி உள்ளிட்ட பலர் வரவேற்ற னர். பின்னர் அங்கிருந்து பிரதமர் கார் மூலம் புதிய விமான நிலைய முனை யத்திற்கு சென்றார். மீனம்பாக்கத் தில் பழைய விமான நிலையம் அகற் றப்பட்டு ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா, தகவல் ஒலிப் பரப்புத்துறை இணைஅமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அப் போது உடனிருந்தனர். பின்னர் பிர தமர் இவர்களுடன் புதிய முனை யத்தை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை அதி காரிகள் அவருக்கு விளக்கமளித்த னர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்ட டம், விமான நிலையத்தின் பயணி கள் சேவைத் திறனை ஆண்டுக்கு 2கோடியே 30லட்சம் பயணிகள் என்ற அளவில் இருந்து 3 கோடி பயணி களாக உயர்த்தும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம் பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற் றுப்புறத்தைக் கொண்டதாகவும் இந்த முனையம் அமைக்கப்பட்டுள் ளது.
வந்தேபாரத் ரயில்
பிற்பகல் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பி யர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் மாலை 4மணிக்கு சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலை யம் வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதி விரைவு ரயில் சேவையை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
தாம்பரம்- செங்கோட்டை புதிய ரயில்சேவை
தாம்பரம் -செங்கோட்டை புதிய ரயில்சேவையையும் அவர் தொடங்கிவைத்தார். திருத்துறைப் பூண்டி -அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ரயில்வே விழாவை முடித்துக் கொண்டு கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தா நினைவு இல்லத்திற்கு சென்ற பிரத மர் அங்கு ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்துப்பேசினார். தமிழ் மொழியையும் கலாச்சா ரத்தையும் மிகவும் நேசிப்பதாக அவர் கூறினார். விவேகானந்தருக்கு மிகப் பெரிய வரவேற்பு அளித்த மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் கூறினார். இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்குப்பார்வையை விவே கானந்தர் கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவேகானந்தர் கண்ட கனவு நிறைவேறி வருவதாக வும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய மோடி, அனை வருக்கும் சமமான வாய்ப்பு அளிப்ப தன் மூலமே சமுதாயம் வளர்ச்சி பெறும் என்றார்.பெண்கள் முன் னேற்றத்தை வலியுறுத்திய பிர தமர், தற்போது தடைகளை தகர்த்து பெண்கள் முன்னேறி வருவதாகவும் கூறினார். ராமகிருஷ்ண மடத்துடன் தனக்கிருந்த உறவு நெருக்கமானது என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் பல்லாவரம் சென்ற பிரதமர் அங்கு நடை பெற்ற விழாவில் ரூ .2700 கோடியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வுள்ள நெடுஞ்சாலைத் திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை- செட்டிக்குளம் புதிய உயர்மட்ட மேம்பாலத்தையும் மாநி லத்தின் மிக நீளமான மதுரை- நத்தம் மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார். பிரதமரின் சென்னை வருகை யை முன்னிட்டு நகரில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. கறுப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைதுசெய்தனர். கறுப்பு பலூன் பறக்கவிடவும் காவல்துறை யினர் அனுமதிக்கவில்லை.பிரதமர் விழா நடைபெற்ற இடத்தின் அருகே கருப்பு சட்டை அணிந்துகொண்டு சென்று கொண்டிருந்த பலரை காவல் துறையினர் மடக்கி விசாரித்தனர்.
அறிவிப்பு
இன்று (ஞாயிறு) வெளி வர வேண்டிய வண்ணக்கதிர் தவிர்க்க இயலாத காரண த்தால் நாளை (திங்கள்) வெளி வரும்.
ஆசிரியர்