tamilnadu

img

கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது  குற்றப் பத்திரிகை தாக்கல்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர  பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் ஆன்-லைன் மூலம் குற்றப் பத்திரிகையை தாக் கல் செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்  திரபாலாஜி பொறுப்பு வகித்து வந்தார். அப்போது,  ஆவி னில் வேலை வாங்கித் தருவ தாக கூறி ரூ.3 கோடி மோசடி  செய்ததாக ரவீந்திரன் என்ப வர் புகார் அளித்தார். அதன்  பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக் குப் பதிவு செய்தனர்.  பின்பு, அவர் கைது  செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசா ரித்த உயர்நீதிமன்றம், வழ க்கை சிபிஐ விசாரிக்க உத்தர விட்டது. இதற்கு தடைவிதிக்க வேண்டுமென  ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்  தார். இந்தநிலையில், நீதிபதி கள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த  மாதம் 17-ம் தேதி விசா ரணை நடத்தியது. இரு தரப்பு வாதங்களை யும் பதிவு செய்து கொண்ட  நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இரு வாரங்களுக்  குள் குற்றப்பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைத்த வுடன், வழக்கு தொடர ஆளு நர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என  தமிழ்நாடு அரசு தெரிவித் தது. இந்த நிலையில், இவ்  வழக்கில் உரிய சட்ட நட வடிக்கை எடுக்க ஆளுநர்  ஆர்.என்.ரவி ஒப்புதல்  அளித்தார். இதையடுதது,  விருதுநகர் குற்றப்பிரிவு  போலீசார், ராஜேந்திர பாலாஜி மீது ஆன் லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்துள்ளனர். அதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு திருவில்லி புத்தூரில், எம்.பி, எம்.எல். ஏக்கள் தொடர்பான வழக்கு களை விசாரிக்கும் நீதிமன் றத்தில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் லஞ்சம் தொடர்பான சட்ட விதிகள் சேர்க்கப்படவில்லை எனக்  கூறி குற்றப் பத்திரிகை யை நீதிமன்றம் திருப்பி  அனுப்பியது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், ஆளுநரின் அனுமதி யின் படியும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் புதனன்று கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது குற்  றப்பத்திரிகையை  தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தபுரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் அரசமர வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில், கிராம பொதுமக்கள் சி.சங்கரலிங்கம், ஜி.பாண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புதனன்று மனு அளித்தனர்.