சென்னை, மார்ச் 10- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக மார்ச் 12 ஆம தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதி களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி யால், 12, 13,14 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை யில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.