தஞ்சாவூர், மார்ச் 12- வாழை சாகுபடியில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து முன்னோடி விவசாயியிடம் வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கேட்ட றிந்தனர். திருச்சிராப்பள்ளியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, வாழை ஆராய்ச்சி மையத்தில் ஐந்து நாட்கள் சர்வ தேச கருத்தரங்கை நடத்தின. ருத்தரங்கில், இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனி ஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 வாழை ஆராய்ச்சியா ளர்கள் கலந்துக்கொண்டனர். தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ஐ.ரவி, தொழில்நுட்ப அலுவலர் கே.காம ராஜ் ஆகியோர் தலைமையில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியைச் சேர்ந்த முன்னோடி வாழை விவ சாயி மதியழகன் தோட்டத்தைப் பார்வையிட்டு வாழை சாகுபடியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித் துக் கேட்டறிந்தனர்.
ஆராய்ச்சியாளர்களிடம் விவ சாயி மதியழகன் “வாழை லாபமும், மருத்துவக் குணமும் கொண்ட ஒரு பயிர். வாழைத் தண்டு சிறுநீர கத்தில் ஏற்படும் கல் தாக்குதலை குணப்படுத்தும், வாழைப் பூவில் பல்வேறு உணவு பொருட்கள் தயா ரிக்கலாம், வாழையில் பூவம் ரகத் தின் பழம், இலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சத்தும், ஆரோக்கியமும் கொண் டது என்றும் வாழை இலையின் பயன்பாடும், பூச்சி, நோய் தாக்கு தல், இயற்கை சீற்றங்கள் குறித் தும், அதிலிருந்து வாழைத் தார், வாழை மரங்களை எப்படி பாது காக்க வேண்டும், வாழைக்கு தேவையான உரங்கள், அதற்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக் கள் குறித்தும் கூறினார் இதுகுறித்து முதன்மை விஞ் ஞானி ஐ.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது; நமது நாட்டில் வாழை யில் இலை முதல் தண்டு வரை முழுமையாக பயன்படுத்து கிறோம். வெளிநாடுகளில் அதிகள வில் பழங்களுக்கு மட்டுமே முக்கி யத்துவம் அளிக்கின்றனர். தமிழ கத்தில் வாழை சாகுபடியில் கையா ளும் முறைகள், பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் எப்படி சமாளிக்க வேண் டும் உள்ளிட்டவைகளை தெரிந்து கொண்டு அவர்களின் நாட்டில் உள்ள வாழை விவசாயிகளிடம், இங்குள்ள விவசாய முறைகள் குறித்து கொண்டு செல்ல ஆரா ய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ள னர்” என்றார்.