tamilnadu

314 கோயில்களுக்கு தரச்சான்று

சென்னை,ஜன.24- தமிழகத்திலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்க ப்பட்ட தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கோ யில் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்வழங்கி வாழ்த்தினார். தமிழகத்திலுள்ள 314 திருக்கோயி ல்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருப்போரூர் – கந்தசாமி, சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயில்  உள்ளிட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கினார்.